திருவனந்தபுரம் ஜனவரி மாதம் முதல் வாரத் ்தில் பல்கலைக்கழக மானி யக் (யுஜிசி) குழுவின் புதிய வரைவு விதி வெளியானது. அதில், ”பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்த ரான ஆளுநரே முடிவு செய்வார். தேடுதல் குழு தலைவராக ஆளுநர் பரிந்துரைக்கும் நபரும், உறுப்பி னர்களாக யுஜிசி பரிந்துரைக்கும் நபரும் இருப்பர்” என அதில் கூறப் பட்டுள்ளது. இந்த புதிய விதிகளில் மாநில அரசின் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த பாரபட்சமான உத்த ரவுக்கு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட இந்தியா கூட்டணி ஆளும் மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், பல்கலைக் கழக மானியக் குழுவின் வரைவு விதிகளை எதிர்த்து பிப்ரவரி 20ஆம் தேதி கேரள அரசு மாநாடு நடத்த உள்ளது. இதுதொடர்பாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஆர்.பிந்து கூறுகையில், “யுஜிசியின் வரைவு விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறும் கூட்டாட்சி கொள்கைக்கு விரோதமானது. வரைவு விதிகளை எதிர்க்கும் மாநிலங்களின் உயர் கல்வி அமைச்சர்களுக்கான மாநாட்டை பிப்ரவரி 20ஆம் தேதி நடத்த நாங்கள் திட்டமிட்டுள் ளோம். அதனால் யுஜிசி வரைவு விதிகளை எதிர்க்கும் மாநிலங்க ளின் உயர்கல்வி அமைச்சர்களு க்கு மாநாட்டில் பங்கேற்க வேண் டும்” என அவர் கோரிக்கை விடுத் துள்ளார். முன்னதாக தமிழ்நாடு, கர் நாடக அரசுகள் இணைந்து யுஜிசி எதிர்ப்பு மாநாடு பிப்.5ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெறுகிறது என்பது குறிப்பி டத்தக்கது.