states

img

சந்தேஷ்காளியில் தோழர் பிருந்தா காரத்

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்குட்பட்ட சந்தேஷ்காளி கிராம பெண்களின் நிலத்தை அபகரித்தும், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியும் உள்ளனர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் சந்தேஷ்காளி கிராம பெண்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, உங்களுடன் நாங்கள் இருப்போம் என்று உறுதி கூறினர்.