சென்னை, மார்ச் 21- மக்களவைத் தேர்தலில், நடிகர் கருணாஸ் தலைமை யிலான முக்குலத்தோர் புலிப்படை, திமுக கூட்ட ணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டா லினை, நடிகர் கருணாஸ் வியாழனன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்தார். அப்போது திமுக கூட்டணிக்கான தனது ஆத ரவைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்த அவர், “தமிழ்நாடு முதல மைச்சரைச் சந்தித்து சீர் மரபினர் சான்றிதழ் தொடர் பான எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றியதற்கு நன்றி தெரி வித்தேன். வரக்கூடிய தேர்த லில் மதவாத சக்தியை, மதத்தை வைத்து மக்களைப் பிரிக்கும் பாஜகவை வீழ்த்த, இந்தியா கூட்டணியை ஆத ரிப்பதோடு, எல்லா மக்க ளுக்குமான அரசு அமைய வேண்டும். இதற்காக திமுக கூட்டணி போட்டியிடும் 40 தொகுதியிலும் நான் உட்பட எங்கள் கட்சியினர் அனை வரும் பிரச்சாரம் மேற் கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்தார். முன்னதாக அறிக்கை ஒன்றையும் கருணாஸ் வெளி யிட்டார். அதில், “பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுக வை விரட்ட, நாம் ஒரு குடை யின் கீழ் அணியமாக வேண் டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த மக்களவை தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும். மதவெறி சக்திகளை அடி யோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற, மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியைக் காக்க ‘இந்தியா’ கூட்டணியை 2024 மக்களவை தேர்தல் களத் தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் திமுகவை முக் குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது. இனி மோடி ஆட்சி மீண் டும் வந்தால் இந்திய பெரு முதலாளிகளின் கையில், கார்ப்பரேட்டின் கொள்ளைக் கூடாரமாகி விடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக-வின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழகத்தில் அடிமை துரோகக் கட்சி யான அதிமுகவை தோற்க டித்திட இந்த மக்களவைத் தேர்தல் நமக்கு கிடைத்த சரி யான வாய்ப்பாகும்” என்று கருணாஸ் குறிப்பிட்டுள் ளார்.