states

img

பூஸ்டர் தடுப்பூசி: அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது - தில்லி உயர்நீதிமன்றம்

பூஸ்டர் தடுப்பூசி குறித்த வழக்கில் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆதித்யா லரோயா என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் இந்த மனு நீதிபதி படேல், ஜோதி சிங் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்தியாவில் முன் களப்பணியாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு 9 மாத கால இடைவெளிக்குப் பிறகு தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதாகவும் ஆனால் சில நாடுகளில் இரண்டாவது தடுப்பூசிக்கு பிறகு 39 நாட்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டினார். இதனால் இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசிகான கால இடைவெளியை குறைக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இந்த வழக்கில் நீதிபதிகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் கால இடைவெளியை மருத்துவ நிபுணர்கள் நிர்ணயித்துள்ளனர். இதுபோன்ற அரசின் கொள்கை விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.