லடாக் 2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் இரண்டாக பிரிக் கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேச மாக மாற்றப்பட்டது. சமீபத்தில் நிறைவு பெற்ற சட்டமன்றத் தேர்தல் மூலம் ஜம்மு-காஷ்மீரில் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தி யா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் லடாக்கில் இன்னும் ஒன்றிய அரசின் பிரதி நிதியான துணை நிலை ஆளுநர் மூலமே ஆட்சி நிர்வாகம் நடை பெற்று வருகிறது. சிவாஜி சிலை இத்தகைய சூழலில் லடாக் கில் சிவாஜி சிலை மூலம் பதற் றத்தை ஏற்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளது மோடி அரசு. கிழக்கு லடாக் பகுதியில் டிசம்பர் 26ஆம் தேதி இராணுவத்தின் 14 கார்ப்ஸ் லெப்டினன்ட் ஜெனரல் ஹிதேஷ் பல்லா, மராட்டிய மன்னர் சிவாஜியின் 30 அடி உயர வெண் லச் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலை கடல் மட்டத் தில் இருந்து 14,300 அடி உயரத்தில் உள்ள பாங்காங் சோ ஏரிக்கரை யின் இந்திய-சீனா எல்லை கட்டுப் பாட்டுக் கோடு அருகே திறக் கப்பட்டுள்ளது. “வீரம், தொலைநோக்கு மற்றும் அசைக்க முடியாத நீதியின் அடிப்படையிலேயே சிவாஜி சிலை திறக்கப்பட்டுள்ளது” என 14 கார்ப்ஸ் இராணுவ பிரிவு தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. பதற்றம் ஆனால் புத்த மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் லடாக் பகுதியில் உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமலும், அனுமதி பெறாமலும் திடீரென இந்து கலாச் சார சின்னமாக கருதப்படும் சிவாஜி யின் சிலையை நிறுவியுள்ளதற்கு லடாக் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளி யாகியுள்ளதால் லடாக் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரு கிறது. இதுதொடர்பாக லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலின் முன்னாள் நிர்வாக கவுன்சிலரான ஸ்டான்சின் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறு கையில்,”பாங்காங்கில் சிவாஜி சிலை திறக்கப்பட்டுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. இது உள்ளூர் மக்களின் கலாச்சா ரத்தை கவனத்தில் எடுத்துக்கொள் ளாமல் சிலை நிறுவப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனம் சார்ந்த இடத்தின் பாதுகாப்பிற்கு சிவாஜி சிலை சிக்கலை ஏற் படுத்தும்.” இதே போல சமூக ஆர்வல ரும், மூத்த அரசியல்வாதியுமான சஜ்ஜத் கார்கிலி கூறுகையில், “உள்ளூர் மக்களின் உணர்வை ராணுவம் மதிக்கவில்லை. மராட் டிய மன்னரான சிவாஜி மகா ராஷ்டிராவிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருந்தாலும், அவர் லடாக்கிற்கு அரசியல் ரீதி யாக பொருத்தமானவர் அல்ல. லடாக்கில் சிவாஜி சிலை நிறுவி யுள்ளது கலாச்சார ஆதிக்கத்தின் வடிவம் ஆகும். டாக் மீது கலாச் சார சின்னங்களை” திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.