புதுதில்லி, ஆக. 9 - மணிப்பூரில் ராணுவத்தை பயன் படுத்தினால் ஒரே நாளில் அமைதி யை கொண்டு வரலாம். ஆனால் மோடி அரசு அதனை செய் யாமல் மணிப்பூரை சுக்குநூறாக உடைத்துள்ளார்; அமித்ஷா, அதானி பேச்சை மட்டுமே கேட்டும் மோடி, இந்தியாவின் குரலை கேட்க மறுக்கிறார் என்று, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேலும், “மணிப்பூரில் ‘இந்தி யா’ என்ற சித்தாந்தத்தையே ஒன்றிய அரசு கொலை செய்து விட்டதாகவும், பாரதமாதாவை படுகொலை செய்த இவர்கள், தேசப்பற்றாளர்கள் அல்ல; தேசத் துரோகிகள்” என்றும் பாஜகவின ரை அவர் கடுமையாக சாடினார். ராகுல் காந்தியின் ஆவேச மான பேச்சை சகித்துக் கொள்ள முடியாமல், பாஜக உறுப்பினர்கள் கூச்சல் போட்டும், குழப்பம் செய்தும் அமளியில் ஈடுபட்டனர்.
அதானி என்றதும் பாஜக எரிச்சல்
மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது, நாடாளுமன்றத்தில் புதன்கிழ மையன்று 2-ஆவது நாளாக விவா தம் நடைபெற்றது. இந்த இரண்டா வது நாள் விவாதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையின் தொடக்கத்திலேயே அதானி பெயரை குறிப்பிட்டு ஆரம்பித்து, பாஜகவினரை பதற்றத்திற்கு கொண்டு சென்றார். ராகுல் காந்தி தமது பேச்சில் அதானியை குறிப்பிட்ட உட னேயே, பாஜக எம்.பி.க்கள் கொதித்தெழுந்தனர். ராகுல் காந்தி பேச எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அவர்களுக்கு, காங்கிரஸ் எம்.பி.க்கள் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து ராகுல் காந்தி தொடர்ந்து பேசினார். “சபாநாயகர் அவர்களே, எனது தகுதி நீக்கத்தை திரும்பப் பெற்று, மக்களவை உறுப்பின ராக அங்கீகரித்ததற்கு முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடைசியாக (முந்தைய கூட்டத்தொடரில்) நான் அதானி மீது கவனப்படுத்தி பேசியது உங்களுக்கு பிரச்ச னையை ஏற்படுத்தி இருக்கலாம். அதோடு உங்களின் மூத்த தலை வர் (பிரதமர் நரேந்திர மோடி) கோபத்தோடு, வேதனை அடை ந்து இருக்கலாம். அந்த வலி உங்களுக்கும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை அறிகிறேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள் கிறேன். ஆனால், நான் உண்மை யையே பேசினேன்” என்றார். “அதானி குறித்து பேசினாலே பாஜக-வினர் எரிச்சலடைகின்ற னர்” என்றதுடன், “இன்று எனது பேச்சு அதானியைப் பற்றி இருக்காது. மாறாக, மணிப்பூரை பற்றி மட்டுமே பேசப் போகிறேன். நான் இன்று யாரையும் அதிகமாக தாக்கிப் பேசப்போவதில்லை என்பதால், பாஜகவில் உள்ள எனது நண்பர்கள் பயப்படத் தேவையில்லை’’ என்றும் கிண்டலாக குறிப்பிட்டார்.
‘எனது பயணம்’
உரையைத் தொடர்ந்த அவர், “நான் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தை தொடங்கினேன். 130 நாட்கள் ‘இந்தியா ஒற்றுமை’ யாத்திரை யை மேற்கொண்டேன். யாத்திரை சென்றபோது என்ன லட்சியத்திற்காக யாத்திரை மேற்கொள்கிறீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்டார்கள். குமரி யில் யாத்திரையை தொடங்கிய போது நாட்டை புரிந்து கொள்வ தற்காகவே தொடங்கினேன். அன்பை செலுத்துவதற்காகத் தான் நான் நடைபயணத்தை மேற்கொண்டேன். இந்திய ஒற்றுமை பயணத்தின் தொடக்கத்தில் அச்சம் இருந்தது; இந்த பயணத்தில் 8 வயது சிறுமி எழுதிய கடிதத்தில், ‘ராகுல், நான் உங்களுடன் பயணிக்கிறேன்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது மனதில் தோன்றிய ஒரே எண்ணம், இந்த பயணத்தை மேற்கொள்ள போதிய சக்தியை எனக்கு கொடுக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். லட்சக் கணக்கான மக்கள் இந்த பய ணத்தில் எண்ணுடன் இருந்த னர். நாள்தோறும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை விவ சாயிகள், தொழில் முனைவோர் என அனைவரும் உடன் இருந்த னர். விவசாயிகளிடையே பேசும் போது அவர்களின் பயம், பசி எனக்குள்ளும் வந்தது. இந்திய ஒற்றுமைப் பயணத்துக்கு பின் என்னிடம் இருந்த ஆணவம் அகன்று விட்டது. என்னுடைய மனத்தில் இருந்த வெறுப்பை அகற்றிவிட்டு அன்பையே நிறை த்து வைத்து இருக்கிறேன். ‘இத யத்தில் இருந்து வரும் வார்த்தை கள் இதயத்திற்கே செல்லும்’ என்பது பிரபல பாரசீக கவிஞர் ரூமியின் கவிதையாகும்.
உண்மை இந்தியாவின் நிலை என்ன?
நான் ஒற்றுமை யாத்திரையின் மூலமாக உண்மையான இந்தி யாவை பார்த்தேன். இந்திய விவ சாயிகளின் நிலை மோசமாக இருப்பதை நடைபயணம் மூல மாக உணர்ந்து கொண்டேன். விவ சாயிகளின் வலிகளை சொல்வ தற்கு என்னிடம் வார்த்தைகளே கிடையாது. ஒற்றுமை இந்தியா யாத்திரை என்னை மாற்றி இருக்கிறது. 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி யில் அவதூறுகள், விமர்சனங் களால் நான் தாக்கப்பட்டு வரு கிறேன். பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால், சிறைக்குச் செல்வதற்குக் கூட நான் தயாராக இருக்கிறேன். நான் நம்பும் கொள்கைக்காக உயிரையும் விடத் தயாராக உள்ளேன். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “என் ஒரு தாய் இங்கே அமர்ந்திருக்கிறார். மற்றொரு தாயை (பாரதமாதாவை) நீங்கள் (பாஜக-வினர்) மணிப்பூரில் கொன்று இருக்கிறீர்கள். ‘இந்தியா’ என்ற சித்தாந்தத்தை அரசு கொலை செய்துவிட்டது, மணிப்பூர் சம்பவம் மூலம் நிரூ பணம் ஆகி உள்ளது. மணிப்பூ ரில் ராணுவத்தை பயன்படுத்தி னால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம். ஆனால் நீங்கள் (மோடி அரசு) அதனை செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் குரலை கேட்க மாட்டார் என்றால் அவர் யாருடைய குரலை கேட்பார்?’’ எனக் குமுறினார்.
இவ்வாறு ராகுல் பேசுகை யில், பாஜக தலைவர்கள் குறுக்கீடு செய்தனர். ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜூஜூ “ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்’’ என்றார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவினரும் ராகுலைப் பேச விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை யில் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக வினரை, சபாநாயகர் இருக்கை களில் அமரவைத்தார். ராகுல் காந்தி தொடர்ந்து பேசினார்... “இலங்கையை அனுமன் எரிக்கவில்லை. ராவணனின் ஆணவம்தான் இலங்கையை எரித்தது. ராமனால் ராவணன் கொல்லப்படவில்லை. ஆண வத்தால் ராவணன் கொல்லப் பட்டார். நீங்கள் (மோடி அரசு) மொத்த நாட்டையும் எரிக்க விரும்புகிறீர்கள். முதலில் மணிப்பூர், பிறகு ஹரியானா. நீங்கள் நாட்டையே எரிக்க முயற்சி செய்கிறீர்கள்.. ராமா யணத்தில் மேகநாதன், கும்ப கர்ணன் பேச்சை ராவணன் கேட் டான்; அந்த ராவணனைப் போல பிரதமர் மோடியும், அமித்ஷா- அதானி ஆகிய 2 பேர் சொல் வதை மட்டும் கேட்கிறார். சில சமயங்களில் ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் மோடி அரசு யார் பேச்சையும் கேட்கத் தயாராக இல்லை”. இவ் வாறு ராகுல் காந்தி பேசினார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான உரையை முடித்ததும், ராஜஸ்தான் பொதுக்கூட்டத் திற்குச் செல்வதற்காக, ராகுல் காந்தி அவையிலிருந்து கிளம்பிச் சென்றார். முன்னதாக எதிர்க்கட்சி கள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களை நோக்கி தனது முத்தங்களைப் (Flying Kiss) பறக்கவிட்டார்.