ஹைதராபாத், அக்.6- விரைவில் தேர்தல் அறி விக்கப்படவுள்ள ஐந்து மாநிலங்களில் தெலுங்கா னாவும் ஒன்று. இங்கு ஆட்சியை பிடிக்கப் போவ தாக பாஜக தலைவர்கள் கூப்பாடு போட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியும் தெலுங் கானா சென்று ஜம்பமாக பேசி வந்தார். இந்நிலை யில் ‘லோக்போல்’ நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவின் ஆட்சிக் கனவு கனவாகவே முடியும்என்று தெரிய வந்துள்ளது. சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 119 இடங்களில் ஆட்சியமைக்க தேவைப்படும் 60 இடங்களை எளிதாக காங்கிரஸ் கைப்பற்றும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 41 முதல் 44 சதவீத வாக்குகளை கைப் பற்றி 61 - 67 இடங்களைப் பெற்று ஆட்சியை கைப்பற்றும், ஆளும் பிஆர்எஸ் கட்சி 39 முதல் 42 சதவீத வாக்குகளைப் பெற்று 45 - 51 இடங்ககளை மட்டுமே வெல்லும். பாஜக 2 -3 இடங்களையும், ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி 6-8 இடங்களையும் கைப்பற்றும் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.