states

img

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளில் மிகப் பெரிய சதி?

மும்பை 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20 அன்று சட்ட மன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக் கிழமை காலை 8 மணி தொடங்கியது. முதல் சுற்று முதலே மகாயுதி கூட்டணி (பாஜக, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்))  கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. தொடர்ந்து வாக்கு  எண்ணிக்கை முடிவில் 233 தொகுதிகளில் வெற்றி பெற்று  மகாயுதி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. எதிர்க்கட்சி களின் மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணி (காங்கி ரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்),  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி) 53 இடங்  களை கைப்பற்றியது. இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்  முடிவுகளில் மிகப்பெரிய சதி நிகழ்ந்ததாக சிவசேனா  (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி யுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “தேர்  தல் முடிவு மகாராஷ்டிரா மக்களின் முடிவாக இருக்க முடி யாது. மகாராஷ்டிரா மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நாம் பார்க்கும் பார்வை யில் ஏதோ தவறு இருப்பதாகத் தெரிகிறது. இங்கு என்ன  தவறு என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். 120  இடங்களுக்கு மேல் பெறுவதற்கு  மகாயுதி என்ன செய்  தார்கள்? மகாராஷ்டிராவில் 75 இடங்களைக் கூட எம்விஏ  பெறாதது எப்படி? ஆனால் முக்கியமாக ஏதோ சதி நடந்துள்ளது. பொதுமக்களும் கூட இந்த முடிவுகளை ஏற்கவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் பணம் எண்  ணும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை இல்லாமல் ஷிண்டேவுக்கு 60 இடங்களும், அஜித் பவா ருக்கு 40 இடங்களும், பாஜகவுக்கு 125 இடங்களும்  கிடைக்குமா? இந்த மாநில மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல. மகாராஷ்டிர மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என அவர் கூறினார். தேர்தல் முடிவை நம்ப முடியவில்லை: காங்கிரஸ் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நம்ப முடியாததாக உள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து ஆரா ய்ந்து வருகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து  விரிவான அறிக்கை வெளியிடப்படும்” என காங்கிரஸ்  பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார்.

வெறும் 2.22% வாக்குகளில்  36 தொகுதியை  வென்றது எப்படி? சிவசேனா (ஷிண்டே) வெற்றியில் வலுக்கும் சந்தேகம்

சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்த ஏக்நாத் ஷிண்டேவின் அணி மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் 12.44% வாக்குகள் பெற்றுள்  ளது. அதே போல உண்மையான சிவசேனா (உத்தவ்) கட்சி 10.22% வாக்குகள் பெற்று இருக்கி றது. இரு கட்சிகளுக்கும் இடையே வெறும் 2.22%  வாக்கு வித்தியாசம் மட்டுமே. ஆனால் சிவசேனா (ஷிண்டே) அணி 56 தொகுதிகளையும், சிவசேனா  (உத்தவ்) அணி 20 தொகுதிகளை மட்டும் கைப்  பற்றியது. வெறும் 2.22% வாக்குகளில் சிவசேனா  (ஷிண்டே) அணி கூடுதலாக 36 தொகுதியை வென்  றது எப்படி? என சந்தேகம் வலுத்து வருகிறது.

ஹரியானாவைப் போல மகாராஷ்டிராவும்...

வாக்கு எண்ணிக்கை துவங்கி  அடுத்த ஒன்றரை மணி நேரத்தில், அதாவது இரண்டாவது சுற்  றில் எம்விஏ கூட்டணி 125 தொகுதிகளி லும், மகாயுதி கூட்டணி 126 தொகுதி களிலும் முன்னிலையில் இருந்தன. இத னால் மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கைப்பற்ற கடும் போட்டி இருக்கும் என  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3ஆவது  சுற்றில் மகாயுதி கூட்டணி 180க்கும் மேற்  பட்ட தொகுதிகளிலும், எம்விஏ கூட்  டணி 90 தொகுதிகளில் என முன்னிலை  நிலவரம் தலைகீழாக மாறியது. அதன்  பிறகு மகாயுதி கூட்டணி 220க்கும் மேற் பட்ட  தொகுதிகளில் முன்னிலையும், எம்விஏ கூட்டணி 60 தொகுதிகளில் முன்னிலையுமானது. கிட்டத்தட்ட ஹரி யானா மாநில சட்டமன்ற தேர்தல் முடி வைப் போன்று மகாராஷ்டிரா முடிவி லும் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் அரங்கே றியுள்ளன. ஹரியானா சட்டமன்ற தேர்  தல் வாக்கு எண்ணிக்கையின் பொழுது  பாஜக முதலில் வெறும் 10 தொகுதிகளி லேயே மட்டுமே முன்னிலையில் இருந் தது. அதன்பிறகு ஒரே சுற்றில் 38 தொகு திகளில் கூடுதலாக முன்னிலை பெற்று,  இறுதியில் 48 தொகுதிகளில் வெற்றி  பெற்றது. 70 தொகுதிகளில் முன்னிலை யில் இருந்த காங்கிரஸ் 38 தொகுதி களில் சுருண்டது என்பது குறிப்பிடத் தக்கது.