பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
18 ஆண்டுகளில் முதன்முறை யாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி). இதற்காக ஆர்சிபி அணி நிர்வாகம் ஜூன் 4ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழாவிற்கு ஏற்பாடு செய்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரி ழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தானாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம் ஜூன் 5ஆம் தேதி விசாரணை மேற் கொண்டது. விசாரணை முடிவில், “கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று கூட்ட நெரிசல் வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.காமேஸ்வர் ராவ் (பொறுப்பு தலைமை நீதிபதி) மற்றும் நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் விசார ணைக்கு வந்தது. இந்த வழக்குடன் தங்கள் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்யக் கோரி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் (ஆர்சிபி) மனுவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டிஎன்ஏ எண்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ், தனக்கு எதிரான எப்ஐஆரை எதிர்த்து தாக்கல் செய்த தனி மனுவையும்சேர்த்து ஒரே வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது கர்நாடக உயர்நீதிமன்றம். விசாரணையின் போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசி கிரண் ஷெட்டி,”கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதித் துறை ஆணையம் அமைக்கப்பட்டுள் ளது. விசாரணை ஆணையம் அறிக்கை அளிக்க ஒரு மாத காலக்கெடுவும் வழங் கப்பட்டுள்ளது. அலட்சியமாக செயல் பட்ட காவல்துறை அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனால் இன்னும் அரசு தரப்பு பதிலை தாக்கல் செய்ய முடியவில்லை” என வாதிட்டார். சசி கிரண் ஷெட்டியின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்,”கர்நாடக அரசின் பதிலை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, ஜூன் 12 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.