ராகுல் காந்தியை கண்டு பாஜக அஞ்சுவதன் காரணமாகவே அவர் மீது அசாமில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபய் துபே கூறுகையில்,”ராகுல் காந்திக்கு எதிராக பாஜக மிகவும் பயந்து எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் மூலம் பாஜக ஆளும் எந்த மாநிலமும் ராகுல் காந்தியின் உறுதியையும், அவரது இலக்குகளுக்கான அர்ப்பணிப்பையும் குறைக்க முடியாது. அதே போல பாஜக அடிப்படையற்ற வதந்திகளைப் பரப்புகிறது” என அவர் கூறினார்.