பெங்களூரு மாநகர அரசுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம்
பெங்களூரு, ஜூலை 15 - முஸ்லிம் நடத்துநர் ஒருவர், பணி நேரத்தில் குல்லா அணிந்திருந்த தற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் பயணி ஒருவர், அவரைக் கட்டாயப் படுத்தி குல்லாவை கழற்ற வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், சபரிமலை மாலை மற்றும் குல்லா போன்ற மத அடையா ளங்களை அணிவதில் தவறில்லை என்று பெங்களூரு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடை பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்தது. பெங்களூருவில், அரசுப் போக்கு வரத்துக் கழகம் சார்பில் இயக்கப் படும் பேருந்து ஒன்றில் பணியாற்றி வரும் முஸ்லிம் நடத்துநர் ஒருவர் அவரது மத வழக்கப்படி தலையில் குல்லா அணிந்திருக்கிறார். அத னைக் கண்ட ஒரு பெண் பயணி ஒருவர், ‘’பணி நேரத்தின்போது தொப்பி அணியலாமா? இது உங்கள் சீருடை தொடர்பான விதிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? எதற்காக தொப்பி அணிந்திருக்கிறீர்கள்?’’ என கேட்கிறார். அதற்கு அந்த நடத்துநர், “நான் நீண்ட காலமாக அணிந்து வரு கிறேன். பணி நேரத்தில் இதனை அணியலாம் என நினைக்கிறேன்’’ என்று பதிலளிக்கிறார். அதற்கு அந்தப் பெண், “உங்களின் மதம் சார்ந்த விஷயங்களை வீட்டிலும், மசூதியிலும் பின்பற்றி கொள்ளுங் கள். பணியின்போது இதுபோன்று தொப்பி அணியாதீர்கள். இதனை நான் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்’’ என்கிறார். அதற்கு நடத்துநர், “நான் இவ் வாறு தொப்பி அணிந்ததற்கு இது ரை யாரும் ஆட்சேபிக்கவில்லை.
நானும் உயரதிகாரிகளிடம் கேட்கி றேன்’’ என்கிறார். அதற்கு அந்தப் பெண், ‘’சட்ட விதிமுறைகளில் இல்லாவிட்டால் தொப்பியை கழற்றி விடுங்கள்’’ எனக் கூறவே, முஸ்லிம் நடந்துநரும் தனது தலையில் இருந்து தொப்பியை கழற்றினார். இந்தச் சம்பவத்தின் முழு வீடியோவையும் அந்த பெண் பயணி தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதற்கு ஏராளமா னோர் ஆதரவாகவும், எதிர்ப்பாக வும் கருத்துக்களை பதிவிட்டு விட்ட னர். பணியில் இருந்த அரசு ஊழியரி டம் வம்பிழுக்கும் விதமாக பெண் பயணி பேசியபோதும் அவரிடம் அமைதியாக பதிலளித்த நடத்துநர், அந்த பெண்ணின் ஆட்சேபனையை அடுத்து எந்த ஒரு எதிர்ப்பும் கூறாமல் தனது குல்லா-வை கழற்றி யது அனைத்து தரப்பினரின் பாராட்டு தலையும் பெற்றது. இதையொட்டி, பணியின்போது மத அடையாளங்க ளை அணியலாமா? என்ற தீவிரமான சர்ச்சை முன்னுக்கு வந்தது. இதையடுத்து, “பணியின் போது மத அடையாளங்களை அணியக் கூடாது என்று எந்த ஒரு விதியும் போக்குவரத்துக் கழக அலுவலர்களு க்கு இல்லை” என்று பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் லதா அறி விப்பு வெளியிட்டுள்ளார். மேலும், “சபரிமலை செல்லும் போக்கு வரத்துக் கழக பணியாளர்கள், ஐயப்ப பக்தர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் விதமாக அணியும் மத அடையாளங்களும் அனுமதிக்கப்பட்டு வருகிறது” என்பதையும் லதா சுட்டிக்காட்டி யுள்ளார்.