states

img

8 ஆவது ஊதியக்குழு அமைக்க ஒப்புதல்

ஒன்றிய  அரசு ஊழியர்களின் சம்ப ளத்தில் திருத்தம் செய்வதற் கான  8 ஆவது ஊதியக்குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்பு தல் அளித்துள்ளார். தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கொடுக்க வேண்டிய பல்வேறு பணப்  பலன்களை  திருத்தியமைக்க 8 ஆவது  ஊதியக் குழுவை அமைக்க ஒன்றிய  அமைச்சரவை வியாழனன்று (ஜன.16) ஒப்புதல் கொடுத்துள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமை யில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட் டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. குழு வின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பி னர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்  என அவர் தெரிவித்தார். ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பள  அளவை பணவீக்கம் மற்றும் பொருளா தாரச் சூழலுக்கு ஏற்ப  மாற்றியமைக்க ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஆணையத்தை ஒன்றிய அரசு  அமைக்கிறது. சம்பள அமைப்பை திருத்  துவதோடு மட்டுமல்லாமல், அவை ஓய்வூதியதாரர்களுக்கான பல்வேறு பணப்பலன்களையும் தீர்மானிக்கின்றன.