ஆந்திராவில் அங்கன்வாடி தொழிலாளர்கள் போராட்டம்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சம்பள உயர்வு, தொழிலாளர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தலைமையில் அங்கன்வாடி பெண் தொழிலாளர்கள் பிரம்மாண்ட பேரணியுடன் போராட்டம் நடத்தினர். ஆனால் விஜயவாடா நகரத்திற்குள் பேரணி நுழைய பாஜக கூட்டணி ஆளும் ஆந்திர காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை கண்டித்து விஜயவாடா நகர எல்லையில் அங்கன்வாடி தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர்.