சாதி பாகுபாடுகளின்றி நாலம்பலத்துக்குள் நுழைய அனைத்து சாதியினருக்கும் அனுமதி
காசர்கோடு கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் பிலிகுளத் ்தில் உள்ளது ராயர மங்கலம் பகவதி கோவில். இந்த கோவி லின் நாலம்பலத்துக்குள் (கரு வறைக்குள்) பாரம்பரியத்தின் பெய ரால் நடந்துவந்த பாகுபாட்டைக் கடந்து, அனைத்து சாதியினரும் ஏப்.13 ஞாயி றன்று நுழைந்தபோது புதிய வர லாறு படைக்கப்பட்டது. பல நூற்றாண் டுகளாக நம்பூதிரி, வாரியர், மாரர் பிரி வினருக்கு மட்டுமே நாலம்பலம் நுழைய அனுமதி இருந்தது. திருவிழா வின் போது நாயர் மற்றும் மணியானி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில், ஜனகிய சமிதி தலைமையிலான 16 பேர் கொண்ட குழு கோவிலுக்குள் நுழைந்தது. பின்னர், பார்வையிட வந்த அனைவரும் உள்ளே வந்து பிரசாதம் பெற்றுக் கொண்டனர். அனைத்து நம்பிக்கையாளர்க ளுக்கும் நுழைவை அனுமதிக்க பல ஆண்டுகளுக்கு முன்பே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது சாத்தியப்படவில்லை. அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள நினாவ் ஆண்கள் சுய உதவிக்குழு சமீபத்தில் நாலம்பல (கருவறை) நுழைவிற்கான தீர்மானத்தை முன் வைத்தது. ஜனகிய சமிதி, தேவசம் அமைச்சர், மலபார் தேவசம் வாரியம், கோவில் அறக்கட்டளை மற்றும் தந்திரி ஆகியோருக்கும் ஒரு கடிதம் அனுப்பியது. கடந்த மாதம் தந்திரி களக்கட்டிலம் நாராயணன், கோவிலில் ஒரு கலந்து ரையாடல் நடத்தியபோது, உள்ளே சென்று சிலையைத் தொட விரும்புபவர்கள் அதைத் தொடலாம் என்று கூறினார். ஜன கிய சமிதி தலைவர் உமேஷ் பிலிக் கோடு, கன்வீனர்கள் பி.வி.சுனில்குமார், ரவி பிலிக்கோடு, கே.வி.ராஜேஷ், கே. பி.மனோஜ், வல்சராஜ் பிலிக்கோடு, அகில் சந்திரன் ஆகியோர் தலைமையில் கோவில் நுழைவு அமைதியாக நடைபெற்றது.