states

img

4-வது கட்ட வாக்குப் பதிவிலேயே சமாஜ்வாதி ஆட்சி உறுதியாகி விடும்!

லக்னோ, பிப். 18 - உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நான்காவது கட்ட  வாக்குப்பதிவின் போதே, ஆட்சியமைப் பதற்கான பெரும்பான்மையை சமாஜ்வாதி கட்சி பெற்றுவிடும் என்று  அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில், இதுவரை இரண்டு கட்டங்களாக 113 சட்டப்பேர வைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மூன்றாவது கட்டமாக 59 தொகுதிகளுக்கு பிப்ரவரி 20 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், பிரோசாபாத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது, “ஜனநாயகம், அம்பேத்க ரின் அரசியலமைப்புச் சட்டம், அவமானப் படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மற்றும் சிறுபான்மையினரின் மரி யாதை ஆகியவற்றைக் காப்பதற்கான தேர்தல் இது” என்று குறிப்பிட்ட அகி லேஷ், “விவசாயிகளின் வரு மானம் இரட்டிப்பாக்கப்படும், இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப் படும் போன்ற வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை” என்று குற்றம்சாட்டினார். மேலும், “முதலிரண்டு கட்ட வாக்குப் பதிவில் ஏற்கெனவே சமாஜ்வாதி கட்சி சதமடித்து விட்டது. 4-ஆவது கட்ட வாக்குப் பதிவில் ஆட்சியமைப்பதற் கான இடங்களைக் கைப்பற்றிவிடும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.