உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிர யாக் மாவட்டம் கேதார்நாத் சிவன் கோயிலை போல் தில்லியில் மற்றொரு கோவில் கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த கோவிலை கட்ட கேதார்நாத் தாம் அறக்கட்டளை என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. ஜூலை 10 அன்று கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்று விட்டது. இந்நிலையில் இந்த புதிய கோவிலை கட்ட எதிர்ப்புத் தெரிவித்து, உத்தரகண்ட் மாநிலத்தில் கேதார் சபா என்ற அமைப்பு நிறுவப்பட்டு, கேதார்நாத் கோயில் முன்பு மடாதிபதிகளும், துறவிகளும் கடந்த நான்கு நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக ஆட்சியில் கோவில்கள் வாக்கு வங்கிகளாக மாற்றப்பட்டுள்ள நிலை யில் தில்லியில் புதிய கோவில் கட்டு வதன் மூலம் வரும் தில்லி மாநில தேர்த லில் வாக்குகளை பெறும் நோக்கத்தை உள்ளடக்கியுள்ளது எனவும் மறுபுறம் ஏற்கனவே உள்ள கோவிலின் வருமா னம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் மடாதிபதிகள் போராட்டத்தை முன்னெ டுப்பதாகவும் விமர்சனங்கள் எழுந் துள்ளன. ஆனால் மடாதிபதிகள் புதிய கோவில் கட்டினால் கேதார்நாத்தின் முக்கியத்து வம் குறைந்து விடும் என கூறுகின்றனர்.