நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சகம் சாலை விபத்து கள் தொடர்பான புள்ளிவிவரத்தை வெளி யிட்டது. அதில் கடந்த 5 ஆண்டுகளில் (2018 முதல் 2022 வரை) நாட்டில் மொத் தம் 7,77,423 பேர் சாலை விபத்தில் உயிரி ழந்துள்ளனர். அதிக சாலை விபத்து மர ணங்களில் பாஜக உத்தரப்பிரதேச மாநி லம் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 5 ஆண்டுகளில் 1,07,882 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அடுத் ததாக தமிழ்நாட்டில் 84,316 பேரும், மகா ராஷ்டிராவில் 66,370 பேரும் உயிரிழந் துள்ளனர். மத்தியப் பிரதேசம் (58,580), கர்நாடகா (53,448), ராஜஸ்தான் (51,280), ஆந்திரப்பிரதேசம் (39,058), பீகார் (36,191), தெலுங்கானா (35,565) மற்றும் குஜராத் (36,626) ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. தமிழ்நாடு, கேரளாவில் குறைந்த சாலை விபத்துகள் முன்பெல்லாம் சாலை விபத்து மர ணங்களில் தமிழ்நாடு மாநிலம் தான் முத லிடத்தில் இருக்கும். ஹெல்மெட் அணி வது, சீட் பெல்ட் உள்ளிட்ட கடும்கட்டுப் பாடுகளால் தமிழ்நாட்டில் சாலை விபத்து மரணங்கள் வெகுவாக குறைந்துள்ளன. அதே போல தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவிலும் சாலை விபத்து குறைந்துள்ளன. கேரளாவில் கடந்த ஐந்தாண்டுகளில் சாலை விபத்து களில் 19,468 பேர் உயிரிழந்துள்ளனர் என் பது குறிப்பிடத்தக்கது.