states

‘அரசை விமர்சித்ததற்கு 583 நாட்கள் சிறைவாசமா?’

புதுதில்லி, ஏப்.28- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதி ரான போராட்டத்தில் ‘உபா’ சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்ட மாணவ செயற்பாட்டா ளரான உமர் காலித், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனு, தில்லி உயர் நீதி மன்றத்தில் புதனன்று விசாரணைக்கு வந்  தது. அப்போது, உமர் காலித் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரிதீப் பைஸ் ஆஜ ராகி வாதாடினார். ஏப்ரல் 22 அன்று, சித்தார்த் மிருதுல் மற்றும் நீதிபதி ரஜ்னிஷ் பட்நாகர் ஆகிய 2 நீதிபதிகள் அமர்வு, இந்த மனுவை விசா ரித்தபோது, “பிப்ரவரி 2020-ல் அமராவதி யில் காலித் பேசியது, புண்படுத்தக் கூடி யது, அருவருப்பானது மற்றும் வெறுக் கத்தக்கது, வன்முறையைத் தூண்டக் கூடி யது” என்று குற்றப்பத்திரிகையில் கூறப் பட்டிருப்பது பற்றி கேள்வி எழுப்பி இருந்தது. பிரதமருக்கு எதிராக ‘ஜூம்லா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது பற்றியும் கேட்டிருந்தது. அவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் மூத்த வழக்கறிஞர் திரிதீப் பைஸ் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:  “அரசாங்கத்தை விமர்சிப்பது குற்ற மாகிவிட முடியாது. அரசாங்கத்திற்கு எதி ராகப் பேசும் ஒருவருக்கு ‘உபா’ (UAPA) குற்றச்சாட்டுடன் 583 நாட்கள் சிறைவாசம் கொடுப்பது நியாயமில்லை.

நாம் அவ்வ ளவு சகிப்புத்தன்மையற்றவர்களாக ஆக  முடியாது. எந்நேரமும் எச்சரிகை உணர்வு டனேயே மக்கள் பேச முடியாது. காலித் மீதான எப்ஐஆர், பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற சூழலின் விளைவாகும். சிஏஏ-வை எதிர்க்கும் நபர்களிடம் பேச விரும்பாத அரசாங்கத்தைத்தான ‘ஊந்த்  பஹாட் கே நிச்சே ஆகயா’ என்று காலித் கூறகிறார். அவரது பேச்சு நிச்சயமாக சிஏஏ-வுக்கு எதிரானதுதான். அரசாங்கம் மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிரா னதுதான். ஆனால், ஒருபோதும் வன்முறை யை தூண்டுவதற்கான அழைப்பு இல்லை. ‘சக்கா ஜாம்’ (சாலை மறியல்) என்பது  கற்பனையின் எந்த வகையிலும் பயங்கர வாதம் அல்ல. இந்த வழக்கில் எந்தவொரு சாட்சியும் காலித்தால் தூண்டப்பட்டதாக கூறவில்லை. இந்த உரையை கேட்ட தாக குறிப்பிடப்பட்ட இரண்டு சாட்சிகள் மட்டுமே. அவர்களும் பேச்சால் தூண்டப் படவில்லை என்று கூறுகிறார்கள். 1920-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக ஒத்துழை யாமை இயக்கத்தைத் தொடங்கிய காலகட்டத்தில் துவங்கப்பட்டது ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக்கழகம்தான் இப்போது குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது, அவ தூறுகளைச் சந்தித்து வருகிறது, மற்றும் தேச விரோதிகளின் குகை என்று அழை கப்படுகிறது. இவ்வாறு வழக்கறிஞர் திரிதீப் பைஸ் தனது வாதங்களை முன்வைத்துள்ளார்.