states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வாட்ஸ் அப் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் ஒன்றிய அரசு எச்சரிக்கை

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர் தகவல்களை பெற முயற்சி செய்வதால் மக்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில்,”வாட்ஸ் அப்  பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும்.  ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையை  சேர்ந்தவர்கள் என்று கூறி, எந்த நபர்  தொடர்பு கொண்டாலும் எந்த விவரங்க ளையும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக 73409- 21702 என்ற வாட்ஸ் அப் எண்ணிலிருந்து  வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள்  குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த எண்ணை இந்திய பாது காப்பு அதிகாரிகள்போல் வேடமிட்டுச் செயல்படும், பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். பாகிஸ்தான் உளவாளி இந்திய பத்தி ரிகையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, பாதுகாப்பு அதிகாரி யாக நடித்து, ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து தகவல்களைப் பெற முயற்சிக் கிறார்கள். ஆகையால், தயவுசெய்து இதுபோன்ற முயற்சிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் காவல்துறை கண்காணிப்பாளர் சுதீர் சவுத்ரி கூறுகையில்,”இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், எல்லைப் பகுதிகளில் சந்தேகிக்கப்படும் உளவு அழைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றன. தொலைபேசி அழைப்புகள் மூலம் முக்கியமான தக வல்களைப் பிரித்தெடுக்கும் முயற்சிகள் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் இராணுவம் அல்லது மூத்த அரசு அதிகாரிகள் என்று காட்டிக் கொள்ளும் நபர்கள் இதுபோல் நடித்து முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் துருப்புகளின் நடமாட்டம் குறித்த விவரங்களை சேக ரிக்க முயற்சிக்கின்றனர். குறிப்பாக பாது காப்பு நிறுவனங்கள் அல்லது முக்கிய  நிறுவல்களுக்கு அருகில் வசிக்கும்  பொதுமக்கள், தெரியாத அழைப்பா ளர்களுடன் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இதுபோன்ற சம்ப வங்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்” என அவர் தெரி வித்துள்ளார். ஜம்மு 2

குழந்தைகளின் குடும்பத்தினரை சந்தித்து உமர் அப்துல்லா ஆறுதல்

இந்தியாவின் “ஆபரேசன் சிந்தூர்”  தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான்  ராணுவமும் ஏவுகணை தாக்குதல்  நடத்தியது. மே 9ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் 2 குழந்தைகள் பலத்த காயங்களுடன் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த 2 குழந்தை களின் குடும்பத்தினரை சந்தித்து ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆறுதல் கூறி, நிவாரணம் மற்றும் பாது காப்பிற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி யளித்தார். தொடர்ந்து நடைபெற்ற  செய்தியாளர்கள் சந்திப்பில், “இத்த கைய துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பது அரசின் கடமை. வரும் காலத்  தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழா மல் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசிடம்  ஆலோசிக்கப்படும்” என உமர் அப் துல்லா கூறினார்.

விரைவில் 32 விமான நிலையங்கள் திறப்பு

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்  றம் காரணமாக எல்லை மாநி லங்களில் உள்ள 32 விமான நிலை யங்கள் மூடப்பட்டன. தற்போது போர்  பதற்றம் முடிவுக்கு வந்துள்ள சூழலில்,  விமான நிலையங்களை திறப்பது குறித்த  அறிவிப்பு விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக விமானத்துறை அமைச்சக வட்டாரங்கள் மூலம் வெளி யான தகவலின்படி, போர்ப் பதற்றம் கார ணமாக இந்தியாவின் வடமேற்குப் பகுதி களில் உள்ள 32 விமான நிலையங்களில் விமான சேவைகள் மே 15ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாடு களுக்கிடையேயான போர்ப் பதற்றம் தற்போது முடிவுக்கு வந்ததைத் தொட ர்ந்து மூடப்பட்ட 32 விமான நிலை யங்களையும் மீண்டும் திறக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்க ளின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கு வது குறித்த முறையான அறிவிப்பு வெளி யிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. வாஷிங்டன் வர்த்தகத்தைப்