பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநி லத்தில் நக்சல்களுக்கு எதி ரான என்கவுண்டரில் 31 நக்சல் கள் மற்றும் 2 வீரர்கள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பீஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்கா அருகே ஞாயிறான்று காலை பாதுகாப்புப் படையினர் நக் சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவ டிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 31 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 2 பாதுகாப்புப் படை வீரர்களும் பலியானதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று மாலை வரை துப்பாக்கிச் சூடு நடைபெற்று வரு வதாக செய்திகள் வெளியாகின. இத னால் பலி எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டு துவங்கியதிலி ருந்து தற்போது வரை 81 நக்சல்கள் பாது காப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.