புதுதில்லி, ஆக.27-
இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசி ரியர்களின் சேவையை பாராட்டி ஒன்றிய அரசு சார்பில் தேசிய நல்லாசிரி யர் விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர் மற் றும் ஒரு ஆசிரியை என 2 பேருக்கு தேசிய நல்லாசிரி யர் விருது அறிவிக்கப்பட் டுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளி ஆசி ரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென் காசி மாவட்டம் வீரகேர ளம்புதூர் அரசு பள்ளி ஆசி ரியை மாலதி ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விரு துக்கு தேர்வு செய்யப்பட்டுள் ளனர்.
தில்லி விஞ்ஞான் பவ னில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது களை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்குகிறார். “நல் லாசிரியர் விருதை என் மாண வர்களுக்கு சமர்ப்பிக்கி றேன்..” என்று வீரகேரளம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மாலதி நெகிழ்ச்சியுடன் தெரிவித் துள்ளார்.