states

img

பாரதீப் - சாகர் தீவு இடையே நாளை கரையை கடக்கிறது “டானா புயல்”

புவனேஸ்வரம் கடந்த வாரம் வடக்கு அந்த மான் கடல் பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி யாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து புத னன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (டானா) வலுப் பெற்றுள்ளது. இந்த டானா புயல் (கத்தார் நாட்டின் பெயர்) அடுத்த 48 மணி நேரத்திற்குள், அதாவது வெள்ளி யன்று காலை ஒடிஷா மாநிலத்தின் பாரதீப்புக்கும், மேற்கு வங்க மாநிலத்தின் சாகர் தீவுக்கும்  இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 120 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் பாரதீப் -  சாகர் தீவு இடையே 414 கிமீ தொலைவுக்கு இடைப்பட்ட பகுதியில் “டானா புயல்” கரையை கடக்கும் என இந்திய வானிலை தோராயமாக அறிவித்துள்ளது. எனினும் ஒடிசாவின் பூரி அருகே “டானா புயல்” கரையை கடக்க 60% வாய்ப்புகள் உள்ளது என கூடுதல் வானிலை ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. “டானா புயல்” 100 முதல் 120 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத் துள்ளது. மேற்கு வங்கத்தை விட ஒடிஷா மாநிலத்திலேயே “டானா புயல்” அதிக சேதங்களை விளை விக்கும் என வானிலை முன்னெச் சரிக்கை தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ஒடிசா மாநில கடற்கரை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 3 நாட்களுக்கு விடுமுறை “டானா புயல்” 25ஆம் தேதி (வெள்ளி) தான் கரையை கடக்கும் என்றாலும் ஒடிஷா, மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த 48 மணிநேரம் கனமழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத னால் கடற்கரை மாவட்டங்கள் மற்றும் புயலால் அதிக கனமழை எதிர்கொள்ளும் மாவட்டங்களில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு ஒடிஷா, மேற்கு வங்க அரசுகள் விடுமுறை அளித்துள்ளது. ரயில்கள் ரத்து “டானா புயல்” அச்சுறுத்தல் கார ணமாக 150க்கும் மேற்பட்ட ரயில் களை 25ஆம் தேதி (வெள்ளி) வரை தென்கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. 25ஆம் தேதிக்கு பின்னரே ரயில் புறப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.  வடகிழக்கு மாநிலங்களுக்கும் கனமழை முன்னெச்சரிக்கை “டானா புயலின்” கண் பகுதி இன்னும் தெரியவில்லை. அத னால் கரையை கடக்கும் பகு தியை இந்திய வானிலை மையத் தால் தெளிவாக கணிக்க முடிய வில்லை. அதனால் தான் பாரதீப் - சாகர் தீவு இடையே 414 கிமீ  தூரத்தில் “டானா புயல்” கரையை  கடக்கும் என இந்திய வானிலை மையம் தோராயமாக அறிவித்துள் ளது. “டானா புயல்” கிழக்கு நோக்கி திரும்பினால்  ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களிலும், வடகிழக்கு நோக்கி நகர்ந்தால் மிசோரம், அசாம், மேகாலயா மாநிலங்களி லும் கனமழை பெய்ய வாய்ப்புள் ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.