நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம் கர்நாடக தலைநகர் பெங்களூருவை தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. விப்ரோ நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் செயல்பட்டு வரு கின்றன. இந்நிலையில், 2025-26ஆம் நிதி யாண்டில் புதிதாக 12,000 பணியாளர்க ளை சேர்க்க உள்ளதாக விப்ரோ நிறு வனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக விப்ரோ நிறுவன அதிகாரி சவுரப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அடுத்த ஓராண்டில் 12,000 புதிய பணி யாளர்களை பணியமர்த்த திட்ட மிட்டுள்ளோம். கேம்பஸ் மூலம் பணிய மர்த்தப்படும் பணியாளர்கள் எண் ணிக்கை 10,000ஐ எட்டும் என எதிர் பார்க்கிறோம். ஏற்கெனவே 3ஆவது காலாண்டில் புதிதாக 7,000 பணியா ளர்கள் பணியமர்த்தி உள்ளோம். அதே போல அடுத்த காலாண்டில் கூடுதலாக 2,500 முதல் 3,000 வரை புதிய பணியா ளர்களை பணியமர்த்துவோம். ஒவ்வொரு காலாண்டிலும் 2,500 முதல் 3000 வரை புதிய பணியாளர்களை பணி யமர்த்த திட்டம் வகுத்துள்ளோம்” என அவர் கூறினார்.