ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஆஜ்மீர் நெடுஞ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நின்றிருந்த வாகனங்கள் மீது கேஸ் டேங்கர் லாரி (சி என்ஜி) அதிவேக மாக மோதியது. இந்த மோதல் சம் பவத்தால் கேஸ் டேங்கர் லாரி வெடித்தது. மேலும் அருகில் இருந்த வாகனங் களுக்கும் தீ பரவியது. இந்த தீவிபத்தில் சிக்கி சுமார் 40 வாகனங்கள் எரிந்து நாசமாகின. 40 வாகனங்களில் சுமார் 80 பேர் தீக்காயத்து டன் மீட்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்தனர். 28 பேர் 70% தீக்காயங் களுடன் ஆபத்தான நிலையிலும், 40 பேர் லேசான காயங்களுடனும் ஜெய்ப் பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்வாய்ப்பாக பெட்ரோல் பங்க் தீ விபத்தில் சிக்கவில்லை. அதில் தீ விபத்து ஏற்பட்டிருந்தால் 2 கிமீ சுற்றளவு பகுதி கள் சின்னாபின்னமாகி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.