கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ளது ஜி.டி. மால். நாட்டின் முன்னணி மால்களில் ஒன்றான இந்த ஜி.டி. மாலில் ஆடைக் கட்டுப்பாடு என்ற பெயரில் வேட்டி அணிந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப் பட்டது. இதனால் கொ தித்தெழுந்த விவசாயி கள், கன்னட அமைப்பு கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஜி.டி. மால் முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் ஒழுங்கு நடவடிக்கை மேற் கொண்ட கர்நாடக அரசு ஜி.டி. மால்-ஐ 7 நாட்கள் மூட உத்தரவிட்டது. தொடர்ந்து வேட்டி அணிந்த விவசாயிக்கு அனுமதி மறுத்தது மற்றும் ஜி.டி. மாலின் நடத்தை விதிமுறை குறித்தும் கர்நாடக அரசு அதிகாரிகள் அடுத்தகட்ட விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை முடிவில் ரூ.1.78 கோடி வரி செலுத்தாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜி.டி.மால் வணிக வளாகத்திற்கு கர்நாடக அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.