வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மிசோரத்தில் நவ.7 அன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறு கிறது. இதற்காக அர சியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மிசோ ரம் சென்றுள்ளார். இந்நிலையில், திங்களன்று சன்மாரி சந்திப்பிலிருந்து அணிவகுப்பைத் தொடங்கி சுமார் 4.5 கி.மீ தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார். அதன் பின் ஆளுநர் மாளிகை அருகே நடை பெற்ற பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு ஆற்றிய உரையில், “இந்திய அரசு இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்ப தில் காட்டும் ஆர்வத்தை, மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதில் சிறிதளவும் அக்கறை காட்டாதது எனக்கு ஆச்சரி யத்தைத் தருகிறது. மணிப்பூரில் பெண் கள், குழந்தைகள் சித்ரவதைச் செய்து கொல்லப்பட்டனர். ஆனால், அங்குப் பய ணம் செய்வதை பிரதமர் முக்கியமாகக் கருதவில்லை. இரு சமூகத்தினரிடையே மே மாதம் வன்முறை வெடித்ததிலிருந்து பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லா தது வெட்கப்படவேண்டியதொன்றாகும். மணிப்பூரில் நடந்த வன்முறை வெறும் பிரச்சனையின் அறிகுறி. இந்தியா என்ற எண்ணம் தாக்குதலுக்கு உள்ளாகி வரு கிறது. முக்கியமாக நாட்டு மக்கள் மீது அடக்குமுறை நடத்தப்படுகிறது” என அவர் கூறினார்.