“அக்னி பாதை திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பொய்களைப் பரப்புகிறார்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”கார்கில் விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு தியாகி களுக்கு அஞ்சலி செலுத்துவது போன்ற நிகழ்வுகளிலும் பிரதமர் மோடி அற்ப அரசியல் செய்வது மிகவும் வருந்தத் தக்கது. இதற்கு முன் எந்த பிரதமரும் இப்படி செய்ததில்லை. ராணுவத்தின் உத்தரவின் பேரில் தனது அரசு அக்னி பாதை திட்டத்தை செயல்படுத்திய தாக மோடி கூறுகிறார். இது அப்பட்ட மான பொய். நமது வீரம் மிக்க ஆயுதப் படைகளுக்கு மன்னிக்க முடியாத அவ மானம். மோடி அவர்களே நீங்கள்தான் பொய்களைப் பரப்புகிறீர்கள். பணிய மர்த்தப்பட்டவர்களில் 75% பேர் நிரந்தரப் பணிக்காக எடுத்துக்கொள்ளப் படுவார்கள் என்றும், 25% பேர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்படு வார்கள் என்றும் பதிவு செய்துள்ளார். ஆனால், மோடி அரசு இதற்கு நேர் மாறாக செயல்பட்டு, முப்படைகளுக்கும் இந்த திட்டத்தை வலுக்கட்டாயமாக அமல்படுத்தியது. அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம், தாராளமயமாக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை என எதுவும் இல்லை. இதுவரை 15 அக்னி வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். குறைந்த பட்சம் அவர்களின் தியாகத்தையாவது பிரதமர் மதிக்க வேண்டும். அக்னி பாதை திட்டத்தின் மீது இளைஞர்கள் மத்தி யில் கடும் கோபமும் கடும் எதிர்ப்பும் உள்ளது” என அவர் கூறியுள்ளார்.