பாஜக கூட்டணி அரசால் அறிவிக்கப்பட்ட மக்களுக்கு விரோதமான ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி, கட்சி ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பேரணியில் பங்கேற்றனர்.