கிராமப்புற இந்தியா உயிர் வாழ்வதற்கான ஒரே ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கிற மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை எப்படியேனும் ஒழித்துக் கட்டுவதில் மோடி அரசு மும்முரமாக உள்ளது. இந்தத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்தால், நிதி மடைமாற்றம் செய்யப்பட்டால், அதை கண்டறிவதற்கான சமூக தணிக்கை பிரிவுகள் சட்டரீதியாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பிரிவுகள் செயல்படுவதற்கு உரிய நிதியை மோடி அரசு ஒதுக்க மறுத்து வருகிறது. இதன் விளைவாக சமூக தணிக்கை பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன. தணிக்கை செய்வதற்கான பயிற்சி பெற்ற, திறன் வாய்ந்த போதிய பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. தணிக்கை செய்யாமல், இத்திட்டத்தின் நம்பகத் தன்மையை அழிக்க முயற்சி நடக்கிறது. தொழிலாளர்களுக்கு கூலியை விடுவிப்பதிலும் கிரிமினல்தனமான முறையில் அதீத தாமதம் ஏற்படுத்தப்படுகிறது.