states

தீக்கதிர் விரைவு செய்திகள்

துருக்கி - சிரியா நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 11,000-த்தை கடந்தது.  மத்திய கிழக்கு நாடான துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டா கிக்கு கிழக்கே திங்களன்று 7.8, 7.6, 6.0 என்ற ரிக்டர் அள வில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத் தால் தெற்கு துருக்கி பகுதி,  சிரியாவின் - துருக்கி எல்லை பகுதி நகரங்கள் உருக்குலை ந்துள்ளது. எங்கு பார்த்தா லும் கட்டிட இடிபாடுகள், இடி பாடுகளில் சிக்கி சிதைந்த  உடல்கள், சொந்தங்களை இழந்து கதறும் பொது மக்களின் கூக்குரல் என  துருக்கி - சிரியா பகுதிகள் சோகம் நிறைந்த காட்சி களால் துவண்டுள்ளது. உள் ள்நாட்டு மற்றும் சர்வ தேச மீட்பு குழுவினர், செஞ்சி லுவை சங்கத்தினர், பொது மக்கள், பத்திரிக்கையாளர் என அனைவரும் மீட்பு பணி யில் ஈடுபட்டு வரும் நிலையில், துருக்கி - சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.  அதிகபட்சமாக துருக்கி யில் 8,574 பேர் உயிரிழந்த னர். அங்கு 50,000-க்கும்  மேற்பட்டோர் காய மடைந்துள்ளதாக துருக்கி ஜனாதிபதி எர்டோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார். சிரியாவில் 2,530 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் காயமடைந்துள்ள தாகவும் சர்வதேச பத்திரிகை களின் மூலம் தகவல் வெளி யாகியுள்ளது. சிரியா வில் அரசு கட்டுப்பாட்டுப்  பகுதிகள், கிளர்ச்சியாளர் கள் கட்டுப்பாடு என  2 பகுதி களாக இருப்பதால் பலி எண்ணிக்கை தொடர்பாக உறுதியான தகவல் வெளியாகவில்லை. துருக்கி யில் இன்னும் 30சதவீத இடி பாடுகள் அகற்றப்படாமல் உள்ளதால் பலி எண்ணி க்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தக வல் வெளியாகியுள்ளது.

‘‘ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த  மத்திய சட்டம்!”

புதுதில்லி, பிப். 8 - ஆன்லைன் விளை யாட்டு மற்றும் சூதாட்டம் நாடு முழுவதும் பெரிய பிரச்ச னையை கிளப்பியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 19  அன்று, சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட விளை யாட்டை எதிர்த்தும், அதனை தடை செய்யவும் மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளிக்காத நிலை யில், கடந்த 2022 அக்டோபர் 1 அன்று ஆன்லைன் ரம்மி  தடைக்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஆளு நருக்கு அனுப்பி வைக்கப்பட் டது. அந்த அவசரச் சட்டத்திற்கு அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.  எனினும், அவசர சட்டம் கொண்டு வரப்பட்ட பின் சட்டப் பேரவை கூடும் நாளில் இருந்து 6 வாரங்களில் அவ சரச் சட்டம் காலாவதியாகி விடும். அதன்படி ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் காலாவதியானது.  அதேநேரம், ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் நிரந்தர சட்டத்திற்கான மசோதா தொடர்ந்து ஆளுநரி டமே அவரின் ஒப்புதலுக்காக உள்ளது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட மோசடி விவகாரத்தை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், புதனன்று மக்களவையில் எழுப்பினார். இதற்கு பதி லளித்துள்ள ஒன்றிய மின் னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்த ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வரும்” என உறுதி அளித்துள்ளார்.

முதியோர் ஓய்வூதியத் தொகையை  பாதியாகக் குறைத்த மோடி அரசு!

புதுதில்லி, பிப். 8 - முதியோர் ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் இல்லை என ஒன்றிய பாஜக அரசு நாடாளு மன்றத்தில் தெரிவித்துள்ளது.  “முதியோர் ஓய்வூதியத் தொகை கடந்த 12 ஆண்டு களாக உயர்த்தப்படாமல் இருப்பது அரசுக்குத் தெரியுமா?;  பட்ஜெட்டில் அதை உயர்த்தும் திட்டம் ஏதும் உள்ளதா?;  கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதியோர் பென்சனுக்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு?” என நாடாளுமன்றத்தில் வி.சி.க எம்.பி., ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, “இந்தத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 60 முதல் 79 வயது வரையிலானவர்களுக்கு மாதம் 200 ரூபாய்  வழங்கப்படுகிறது. 2007-ஆம் ஆண்டு இது 75 ரூபாயி லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. 80 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 2011 ஆம் ஆண்டு முதல் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 15 ஆவது நிதிக் குழு காலகட்டத்துக்கு (2021-26) இந்தத் தொகை குறித்து சீராய்வு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தை இதே நிலையில் தொடர்வது என்று அப்போது முடிவு செய்யப்பட்டது. எனவே இதை உயர்த்தும் யோசனை அரசிடம் இப்போது இல்லை. ஆனால்  மாநில அரசுகள் அதற்குமேல் உயர்த்திக் கொடுக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்று பதிலளித்துள்ளார். இதனிடையே, “பாஜக ஆட்சிக்குவருவதற்கு முன்பு இந்தத் திட்டத்துக்கு  2013-இல் 9112.46 கோடி  ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், மோடி அரசு அதனை பாதி அளவிற்கு குறைத்துவிட்டதாக ரவிக்குமார் எம்.பி.,  குற்றம்சாட்டியுள்ளார்.

கவிதாவின் முன்னாள் ஆடிட்டரை கைது செய்த சிபிஐ

தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகளும், அம்மாநில எம்எல்சி-யுமான  கவிதா, ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தில்லி மதுபான  ஊழல் வழக்கில், அவர்மீது குற்றம் சாட்டிய சிபிஐ, கடந்த 2022 டிசம்பர் 12 அன்று அவரிடம் நேரில் விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து, தற்போது கவிதாவின் முன்னாள் ஆடிட்டர் புச்சி பாபுவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புச்சி பாபுவுக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பி விசாரணை நடத்திய சிபிஐ, அப்போது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை என்ற அடிப்படையில், தற்போது கைது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

காஷ்மீரில் கடந்தாண்டு 187 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

“கடந்த ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் 125 தாக்குதல்களை நடத்தி உள்ளனர். பாதுகாப்புப் படை தரப்பில் 117 என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக 111 பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 2022-இல் மட்டும் ஜம்மு -காஷ்மீரில் 187 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டில், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் 129 தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினர் 95 பதில் தாக்குதல்களை நடத்தி உள்ளனர். மேலும், பாதுகாப்புப் படையினர் 100 என்கவுண்ட்டர்களை மேற்கொண்டுள்ளனர். 2021-இல் ஜம்மு - காஷ்மீரில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்’’ என ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொது விநியோக மேலாண்மைக்கு ரூ.1.45 லட்சம் கோடி தேவை

2023-24 ஆம் நிதியாண்டில் கொள்முதல் மற்றும் பொது விநியோக மேலாண்மைக்  கான குறுகிய கால இயக்க மூலதனமாக ரூ.1.45 லட்சம் கோடி தேவைப்படு வதாக இந்திய உணவுக் கழகம் Food Corporation of India (FCI) மதிப்பிட்டுள்ளது. கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் இந்த மதிப்பீடு ரூ. 89 ஆயிரத்து 425 கோடியாக இருந்தது என்றும் அது  தெரிவித்துள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டில் உணவு தானிய கொள்முதல் அதிகரிக்கும் என்று  கணக்கிடப்பட்டு இருப்பதாகவும், மேலும், உணவு தானியங்களை எடுத்துச் செல்வதற்கான போக்கு வரத்து செலவு, கிடங்குகள் மேலாண்மை போன்றவற்றுக்கான செலவினத் தொகை அதிகரித்தி ருப்பதோடு, வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட குறுகிய கால கடனை திருப்பி செலுத்துதல் போன்ற வற்றுக்கும் இந்தத் தொகை தேவைப்படுவதாக எப்சிஐ தெரிவித்துள்ளது.

பசுக்களுக்கு சரணாலயம் திறக்கும் உ.பி. பாஜக அரசு!

உ.பி.யில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, ஆட்சிக்கு வந்த நாள்முதல் மனிதர்  களைக் காட்டிலும் மாடுகள் மீது அக்கறை காட்டி வருகிறது. அந்த வகையில், நாட்டி லேயே முதன்முதலாக பசுக்கள் சரணாலயத்தை விரைவில் துவங்க உள்ளதாக அறிவித்துள் ளது. புர்காசி நகரில் அமைக்கப்படவுள்ள இந்த சரணாலய திட்டத்துக்காக 52 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ள உ.பி. பாஜக அரசு, 5,000 கால்நடைகள் தங்கும் அளவிலான சரணாலய கட்டுமானப் பணிகளுக்கு விரைவில் டெண்டர் அறிவிப்பும் வெளியிடவுள்ளது.

சிறையில் கன்னித்தன்மையை பரிசோதிப்பது சட்டவிரோதம்

கேரளத்தில் 1992-ஆம் ஆண்டு அபயா என்ற கன்னியாஸ்திரி கிணற்றில் பிணமாக மீட்கப்  பட்டார். இவரது சாவு தொடர்பான குற்ற வழக்கில் மற்றொரு கன்னியாஸ்திரியான செபி  என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை சிபிஐ அமைப்பானது, 2008-ஆம் ஆண்டு வலுக்கட்டா யமாக கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தியதாகத் தெரிகிறது. இதை எதிர்த்து தில்லி  உயர்நீதிமன்றத்தில் கன்னியாஸ்திரி செபி முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்த சர்மா செவ்வாயன்று தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பில் “ஒரு பெண் சிறை வாசியை கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்துவது அரசியல் சட்டத்துக்கு விரோத மானது, அரசியல் சாசனத்தின் பிரிவு 21-ஐ மீறிய செயல்” என குறிப்பிட்டுள்ளார்.

ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டிய ரயில்வே

இந்திய ரயில்வே 2022-23 நிதியாண்டில்- அதாவது 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரை  ரூ. 1 லட்சத்து 91 ஆயிரத்து 162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தோடு ஒப்பிடுகையில் இது சுமார் ரூ. 41 ஆயிரம் கோடி அதிகமாகும். கடந்தாண்டு இது ரூ.  1 லட்சத்து 48 ஆயிரத்து 970 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் முடிவில்  ரயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

30 லட்சம் காலியிடங்களை எப்போது நிரப்புவீர்கள்!

மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

புதுதில்லி, பிப்.8- ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வாக்கு றுதி என்னானது என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமையன்று பேசியதாவது: “ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தி ருந்தார். கடந்த 9 ஆண்டுகளில் 18 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எங்கே  அந்த 18 கோடி வேலைவாய்ப்புகள்? அதைக்கூட விட்டு விடுங்கள். அரசு துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. இதை எப்போது நிரப்புவீர்கள்? தனியார் நிறுவனங்களில் அரசு ரூ.82 ஆயிரம் கோடி யை முதலீடு செய்துள்ளது. நமது நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் 10 லட்சம் பேர் பணி யாற்றுகிறார்கள். ஆனால், ஒன்றிய அரசோ பொதுத்  துறை நிறுவனங்களில் முதலீடுகளை செய்யாமல், அதானி போன்ற குறிப்பிட்ட சில தனியார் நிறு வனங்களில் முதலீடு செய்கிறது. ஆனால், தனியார் நிறு வனங்களில் 30 ஆயிரம் பேர்தான் பணியாற்றுகிறார் கள். பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களுக்காக நாட்டு மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டி உள்ளது. ஆக்ஸ்ஃபாம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் வளங்களில் 62 சதவீதம் நாட்டு மக்களில் 5 சதவீதத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏழைகளி டம் நாட்டின் வளத்தில் 3-4 சதவீதம் மட்டுமே உள்ளது.  குடியரசுத் தலைவரின் உரையில் இது குறிப்பிடப் படவே இல்லை”. இவ்வாறு அவர் பேசினார்.

தவறானவர்கள் கையில் இரட்டை இலை:  டி.டி.வி தினகரன்

சென்னை, பிப்.8- தவறானவர்கள் கையில் இரட்டை இலை சின்னம் சென்றுள்ளதாக அம முக பொதுச்செயலாள் டிடிவி தினகரன் கூறினார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர்,  2024 நாடாளு மன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட எந்த தடையும் இல்லை. இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஏன் வழங்கவில்லை என்பது புரிய வில்லை. இடைத்தேர்தலில் குக்கர்  சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை யில் பிரசாரம் செய்து வந்தோம்.  குக்கர் சின்ன விவகாரத்தில் போதிய நாட்கள் இல்லாததால் நீதிமன்றம் செல்லவில்லை. இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடி யாது. ஈரோடு இடைத்தேர்தலில் அதி முக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை. யாருக்கு வாக்க ளிக்க வேண்டும் என்பது தொண்டர்க ளுக்கு தெரியும் என்றார்.

அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இடமாற்றம்

சென்னை, பிப். 8- இந்து சமய அறநிலையங்கள் துறையின் கூடுதல் ஆணையராக பணி யாற்றி வந்த ஆர்.கண்ணன் இட மாற்றம் செய்யப்பட்டு நீர்வளத் துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான  உத்தரவை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார்.

ஓ.பி.சி ஆணையத்திற்கு நிர்வாகிகளை நியமிக்க பாமக கோரிக்கை 

சென்னை, பிப்.8- கிரீமிலேயர் வரம்பு உயர்வு  உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில்  முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. அவற்றைக் கருத்தில் கொண்டு தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத் தலைவர் மற்றும் உறுப் பினர்களை மத்திய அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்” என்று அன்பு மணி வலியுறுத்தியுள்ளார்.

கேரள அரசுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

சென்னை, பிப். 8- கேரளாவில் உள்ள அனைத்துக்  கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழ கங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறுகால விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது. நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக இதை செயல்படுத்தியுள்ள கேரள அரசை மக்கள் நீதி மய்யம் பாராட்டுகிறது என்று அதன் மாநில செயலாளர் மூகாம்பிகை ரத்தினம் கூறியுள்ளார்.

அதானி - மோடி அரசின் கூட்டுக்கொள்ளையை நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த ராகுல் காந்தி!

பேச்சு முழுவதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கச் சொல்லும் பாஜக

புதுதில்லி, பிப். 8 - அதானி குழுமம் ரூ. 17 லட்சத்து 80  ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்தி ருப்பதாக ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை வெளியான பின்னணியில், இந்த ஊழலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக அரசுக்கு இருக்கும் தொடர்பு குறித்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் விரிவான முறையில் அம்பலப்படுத்தினார். ராகுல் காந்தியின் இந்த 53 நிமிடப் பேச்சு, பாஜக வட்டாரத்தை அதிர்ச்சிக்கும், பதற்றத்திற்கும் உள்ளாக்கி இருக்கிறது.  இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி யையும், தொழிலதிபர் அதானியை யும் தொடர்புபடுத்தி, ராகுல் காந்தி நாடாளு மன்றத்தில் ஆதாரமில்லாத குற்றச்சா ட்டுகளைத் தெரிவித்துள்ளதாகவும், எனவே, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயக ருக்கு பாஜக எம்.பி. நிஷிகந்த் துபே கடிதம்  எழுதியுள்ளார். ‘’குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிர தமர் நரேந்திர மோடி மீது ஆதாரமற்ற,  அவதூறான, களங்கம் விளைவிக்கக் கூடிய குற்றச்சாட்டுகளை கூறி இருக் கிறார். தனது குற்றச்சாட்டுக்கு எந்த ஆதா ரத்தையும் அவர் சபைக்கு அளிக்க வில்லை. எனவே, அவர் அவையை தவ றாக வழிநடத்தி இருக்கிறார். அவை விதி களை மீறி இருக்கிறார். எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். மேலும், புதனன்று மக்களவை கூடியவுடன் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் கூப்பாடு போட்டனர். இதுதொடர்பாக பேசிய ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “பாஜக  குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு கள் அனைத்தும் தவறானவை. எவ்வித ஆதாரமும் இன்றி ராகுல் காந்தி  உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு களை பேசியுள்ளார். ராகுல் காந்தி பேசிய கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி, அவருக்கு எதிராக உரிமை மீறல் நோ ட்டீஸ் வழங்க வேண்டும்” என கூறினார்.

உலகச் செய்திகள்

கம்போடியாவின் பிரதமர் ஹன் சென், சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். சீனப் பிரதமர் லி கெகியாங்கின் அழைப்பின்பேரில் செல்லும் அவர் பிப்ரவரி 9 முதல் 11-ஆம் தேதி  வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். சீனாவின் புத்தாண்டில் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதல்  வெளிநாட்டுத் தலைவர் ஹன் சென் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட கால நட்பு நாடுகள் என்பதால் உறவை மேலும் ஆழமாக்கு வது பற்றி விவாதிக்கப்படும் என்று சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் கூறியுள்ளார்.

சிறு வர்த்தகர்களுடன் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஜப்பான் தேசிய சிறு வர்த்தகர்கள் மாநாடு என்ற  அமைப்புடன் நடந்த பேச்சுவார்த்தையில், ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கசாய் அகிரா, இவாபுச்சி டோமோ ஆகிய இருவரும் பங்கேற்றனர். மூலப் பொருட் பளின் விலையேற்றத்தால் ஏற்படும் விலைவாசி உயர்வை நுகர்வோர் மீது சுமத்தும் நிலை உருவாகியுள்ளது என்று கவலையுடன் தெரிவித்துள்ள சிறு வர்த்தகர்கள், இதற்கான தீர்வு குறித்து கம்யூனிஸ்ட் கட்சியுடன் விவாதித்திருக்கிறார்கள்.

வடகொரியாவின் உதவியுடன் வியட்நாமின் நின் பின் மாகாணத்தில் உள்ள சதுப்பு நிலக்காடுகளைப் புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. நின் பின் மாகாணத்தின் கிம் சோன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்தப் பணி கொரியாவின் வனத்துறைத்திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. வட கொரியாவுக்கு நன்றி தெரிவித்துள்ள வியட்நாம் விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் குயென் டிரி, உள்ளூர் மக்களுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் திட்டமாகும் இது உள்ளது என்று குறிப்பிட்டார்.