states

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி தொழிற்பயிற்சி அலுவலர்கள் போராட்டம்

சென்னை, நவ.29 - காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி வெள்ளியன்று (நவ.29) கிண்டி யில் உள்ள இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலு வலர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் உள்ள 102 தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 3 இல் ஒரு பங்கு பணியிடங்கள் காலியாக உள்ளன. 20 மாணவர்களுக்கு ஒரு  பயிற்றுநர் என்பது மாறி 80 பேருக்கு ஒரு பயிற்றுநர் பணியாற்றுகிற நிலை  உள்ளது. எனவே, காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும். பொறியியல், கணிதம், அறிவியல், வரைபடம் உள்ளிட்ட பாடங்களை ஒன்றிய அரசு நீக்கியுள்ளது. இந்த  பாடங்களை மாநில அரசு மீண்டும்  கொண்டு வர வேண்டும். பயிற்றுநர் களாக பணியாற்றி வரும் சான்றிதழ்தா ரர்களுக்கு முதல்வராக  பதவி உயர்வு  வழங்க வேண்டும். பதவி உயர்வு, பணியிட மாறுதலை கலந்தாய்வு மூலம்  மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 32 கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்தப் போராட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சீனிவாசன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்  தலைவர் சா.டேனியல் ஜெயசிங் தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் என்.ரமேஷ் பேசி னார். பேச்சுவார்த்தை இதனை தொடர்ந்து சங்கத் தலை வர்களுடன் தொழிற்பயிற்சி இயக்குநர்  விஷ்ணுசந்திரன், இணை இயக்குநர்  ராஜசேகரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். துறை அளவி லான கோரிக்கைகளை ஒரு மாதத்திற் குள் நிறைவேற்றுவதாகவும், பிற கோரிக் கைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்ப தாகவும் உறுதி அளித்தனர்.