states

img

நவம்பர் 1 முதல் வாகனங்கள் வரி உயர்கிறது

சென்னை,அக்.20- வாகனங்களுக்கு வாழ்நாள் வரி உட்பட பல்வேறு வரி வகைகள் உயர்த்துவதற்கான சட்டத்திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங் களுக்கு காலாண்டு வரி ரூ.4,900-ஆகவும், 35 பேருக்கு மேல் பயணித் தால் இருக்கைக்கு ரூ.3 ஆயிரம், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வரி உயர்கிறது. சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப்பகுதிகளில் இயக்க அனு மதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்து களுக்கு மேல் வரி விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு  வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை  பயணிகளின் எண்ணிக்கை அடிப் படையில் வரி உயர்த்தப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் மாண வர்கள், பணியாளர்களுக்கு, பேருந்து களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக் கைக்கு ரூ.45, பிற நிறுவனங்களின் பணியாளர் போக்குவரத்துக்கான வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என வரி விதிக்கப்படுகிறது. புதிய இருசக்கர வாகனங்களுக்கு வாழ்நாள் வரி, ரூ.1 லட்சம் வரை 10 விழுக்காடு, ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 12 விழுக்காடு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.