states

img

2 ஆயிரம் பேரையும் ஒப்பந்த ஊழியர்களாக வைத்திருப்பதா?

சென்னை, அக். 12 - பணிநிரந்தரம் கோரி வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் சென்னையில் வியாழனன்று (அக்.12) பேரணி நடத்தினர். ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து வல்லூர் அனல் மின் நிலை யத்தை நடத்தி வருகின்றன. இந்த மின் நிலையத்தில் ஒரே ஒரு நிரந்தர தொழி லாளி கூட இல்லை. 2 ஆயிரம் தொழி லாளர்களும் ஒப்பந்த ஊழியர்களா கவே உள்ளனர். அரசினால் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதை விட குறைத்த பட்ச ஊதியமே வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 2ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஏற்கனவே ஒரு வார காலம் ஆலை முன்பு தொடர் உண்ணாநிலை போராட்டம் நடை பெற்றது. இதன் தொடர்ச்சியாக  கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது.  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின், என்டிஇசிஎல் வல்லூர் அனல் மின் நிலையக் கிளை இந்த பேரணியை நடத்தியது. சிந்தாதரிப் பேட்டை லேங்ஸ் கார்டன் சாலையில் தொடங்கிய ஊர்வலம் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட் டத்தோடு முடிவடைந்தது.  இந்த போராட்டத்திற்கு சிஐடியு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கே. விஜயன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன், எம்.சின்னதுரை எம்எல்ஏ, மத்திய அமைப்பின் பொதுச்செயலா ளர் எஸ்.ராஜேந்திரன், உதவி பொ துச்செயலாளர் கே.ரவிச்சந்திரன், சிஐடியு திருவள்ளூர் மாவட்டப் பொ ருளாளர் என்.நித்தியானந்தம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோபால், வல்லூர் அனல்மின் நிலைய கிளை நிர் வாகிகள் சதீஷ், பிரபாகரன் சூரியநாரா யணன் உள்ளிட்டோர் பேசினர்.

அமைச்சருடன் சந்திப்பு

இதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் நிதியமைச்சரும், மின் துறை அமைச்சருமான தங்கம் தென்ன ரசு, எரிசக்தி துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரை சங்கத் தலைவர் கள் சந்தித்து பேசினர். அப்போது, முத லமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்ததாக கே.விஜயன் கூறினார்.