48 லட்சம் பேர் எழுதிய உ.பி. போலீஸ் தேர்வு வினாத்தாள் கசிவு
பாஜக ஆளும் உத்தரப்பிர தேசத்தில் 60,000 காலிப்பணி யிடங்கள் கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள் சேர்க்கைக்காக பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்வு நடைபெற்றது. சுமார் 48 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்குபெற்ற இத்தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட் டியே கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என உத்தரப்பிர தேசத்தின் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து போலீஸ் எழுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இப்பணிக்கு மீண்டும் 6 மாதங்களுக்குள் மறு தேர்வு நடத்தப்படும் என்றும் உத்த ரப்பிரதேச பாஜக அரசு அறிவித்துள் ளது. மேலும் இந்த முறைகேடு சம்பவம் தொடர்பாக அம்மாநில போலீசார் இது வரை 244 பேரை (மாநிலம் முழுவதும்) கைது செய்துள்ளனர்.
வீடு புகுந்து தலித் மக்களைத் தாக்கிய பாஜக கவுன்சிலருக்கு கண்டனம்
வீடு புகுந்து தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய பாஜக கவுன்சிலருக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலா ளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் பேரூராட்சி 6 ஆவது வார்டுக்கு உட்பட்ட குள்ளரங்கம்பாளை யம் காலனியில் கோகிலா, அவரது கணவர் சண்முகம், அவர்களின் மகன்கள் சதீஷ்குமார், ரமணிசந்திரன் ஆகியோர் வசித்து வருகின்றனர். அவர்களின் வீட்டருகே கழிவுநீர் அடைத்துக் கொண்டது. எனவே அப்பகுதி கவுன்சிலர் கவின்குமார் அறி வித்துள்ள உதவி மைய எண்ணிற்கு ரமணிச்சந்திரன் அழைத்துள்ளார். போனை எடுத்த கவுன்சிலரின் மனைவி யிடம் பிரச்சனையை தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த கவுன்சிலருக்கு ஆத்திரம் வந்துள்ளது. ஒரு தலித் கழிவு நீர் அடைத்துக் கொண்டதற்காக தன்னிடம் புகார் அளிப்பதா? என்கிற சாதி வெறி தான் அதற்குக் காரணம். கவின்குமார் கவுன்சிலர் மட்டுமல்ல, பா.ஜ.கவின் மொடக்குறிச்சி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளரு மாவார். அன்று இரவு ரமணிச்சந்திரன் வீட்டுற்கே வந்த கவுன்சிலர் கவின் குமார், குடும்பத்தினரை மிரட்டிச் சென்றுள்ளார். அப்போதும் வெறி அடங்காத கவின்குமார் இரண்டு அடியாட்களோடு மறுநாளும் இரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டிற்கு வந்து, சாதி ரீதியாக இழிவாக பேசிய படியே கையாலும், காலாலும், கட்டை யாலும் ரமணிச்சந்திரன், கோகிலா, சண்முகம் ஆகியோர்களை கடுமை யாக தாக்கியுள்ளனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோகிலா கொடுத்த புகாரின் அடிப்படையில் அரச்சலூர் காவல் நிலையம், எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்பட பல பிரிவுகளில் கவின் குமார் மற்றும் அடியாள்களின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.எனினும் தற்போது வரை பா.ஜ.க கவுன்சிலர் கவின்குமார் உள்ளிட்ட எவரும் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு சட்டத்தின் அடிப்படை யில் மருத்துவம் மற்றும் இதர தீர்வுத விகளை தமிழக அரசு உடனடியாக செய்திட வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ள னர். ஆறுதல் பாதிக்கப்பட்டவர்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்ட தலைவர் மா.அண்ணாதுரை, துணைத் தலைவர் என்.பாலசுப்ரமணியன் ஆகி யோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரி வித்ததோடு சட்டப்பூர்வமான நடவ டிக்கைகளையும் மேற்கொண்டு வரு கின்றனர்.