யோகி ஆதித்யநாத் தலைமை யிலான பாஜக ஆட்சி நடை பெற்று வரும் உத்தரப்பிர தேசத்தில் சிறுபான்மையினர், தலித் மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் மிகமோசமான அளவில் அதிகரித்து வரு கிறது. இந்நிலையில், ஜான்பூருக்கு அருகே புலந்திஹ் பகுதியில் “ஜீவன் ஜோதி” என்ற தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் மிகப் பெரியது என்பதால் நாள்தோறும் கிறிஸ்த வர்கள் கூட்டம் அலைமோதும். கிட்டத்தட்ட “ஜீவன் ஜோதி” தேவாலயத்தால் புலந்திஹ் பகுதி தனிப்பட்ட முறையில் பிரசித்திபெற்ற பகுதியாக உள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அப்பகுதி இந்துத்துவா கும்பல் “ஜீவன் ஜோதி” தேவாலயம், அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று பாஜக அரசிடம் புகார் அளித்தது. இதை காரணமாக வைத்து துரித நடவடிக்கையை மேற்கொண்ட யோகி அரசு வியாழனன்று 7 புல்டோசர் மூலம் தேவா லயத்தை இடித்து தகர்த்தது. மதத்தை தாண்டி “ஜீவன் ஜோதி” தேவால யத்திற்கும் புலந்திஹ் பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. அதனால் பொதுமக்கள் பலரும் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதற்றமான சூழல் உள்ளது. இடிப்புச் செலவை தேவாலய நிர்வாகம் தர வேண்டுமாம் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு ள்ளதால் ஜீவன் ஜோதி தேவாலயத்தை இடிக்க ஏற்பட்ட செலவான ரூ. 2.83 லட்சத்தை தேவாலய நிர்வாகம் தர வேண்டும் என உத்தரப்பிரதேச பாஜக அரசு தேவாலய நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.