states

img

வர்க்க நலனுக்காக சமரசமற்ற போராட்டம்! -- தலைமையுரையில் பெ. சண்முகம் உறுதி

விழுப்புரம், ஜன. 3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் (தோழர்கள் என். சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கம்) மத் தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் ஆற்றிய தலைமையுரையில், அரசிய லமைப்பு உரிமைகளைப் பாது காக்கும் போராட்டத்தைத் தீவிரப் படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். “அரசியலமைப்புச் சட்டம் வழங்கி யுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து ரிமை, போராட்ட உரிமை, கூடும் உரிமை ஆகியவற்றை மத்தியில் ஆட்சியி லுள்ள பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டம் பறிக்க முயல்கிறது” என்று சண்முகம் எச்சரித்தார். “போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, தடை விதிப்பு, காவல்துறை மூலம் கைது என அடக்குமுறைகள் தீவிரமடைந்துள்ளன. அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளைப் பறிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராட வேண்டியுள்ளது” என்றார். “மக்கள் நலனுக்காகவும், ஏற் கனவே பெற்ற உரிமைகளைப் பாது காக்கவும், புதிய உரிமைகளை வென் றெடுக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டும். இதில் எந்தவிதமான சம ரசத்திற்கும் இடமில்லை. வர்க்க நலன் களைப் பாதுகாக்க சமரசமற்ற போரா ட்டத்தை தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும்” என்று உறுதிபட தெரிவித்தார். தமிழகத்தின் எதிர்காலம் குறித்து பேசிய பெ. சண்முகம், “அரசியலில் தீர் மானிக்கும் சக்தியாக இடதுசாரிகள் வளர வேண்டும். இடதுசாரிகள் இல்லையென்றால் தமிழகத்தின் எதிர் காலமும் இல்லை என்ற நிலையை உரு வாக்க வேண்டும். ‘சுரண்டல் ஒடுக்கு முறை தகர்க - சமத்துவ தமிழ்நாடு மலர்க’ என்ற மாநாட்டு முழக்கத்தை சாத்தியமாக்க அனைவரும் இணை ந்து போராடுவோம்” என அறைகூவல் விடுத்தார்.