திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி., யான மஹுவா மொய்த்ரா, தொழி லதிபர் அதானி குறித்து நாடா ளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி யிடமிருந்து பரிசுப் பொருட்களை லஞ்ச மாக பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு அக்., 31 அன்று மொய்த்ராவை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால், நெறி முறைக்குழு அதிகாரப்பூர்வமாக சம்மன் அனுப்புவதற்கு முன்பாகவே ஊடகங்க ளில் வெளியிட்டதை காரணம் காட்டியும், வேறொரு நாளில் ஆஜராக அனுமதிக் கும்படி அவர் கேட்டுக்கொண்டார். இத னால் விசாரணை தேதி தள்ளி வைக்கப் பட்டது. மேலும் தனது தொகுதியில் திட்டமி டப்பட்ட நிகழ்ச்சிகள் நவம்பர் 4 அன்று முடிந்தவுடன் உடனடியாக குழுவின் முன் ஆஜராக உள்ளதாக மஹுவா மொய்த்ரா கூடுதல் அவகாசம் கேட்டுக்கொண்டார். ஆனால் மஹுவா மொய்த்ராவை நவம்பர் 2 அன்று கட்டாயம் விசார ணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், மேலும் நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்று மக்களவை நெறிமுறைக் குழு உத்தரவிட்டுள்ளது.