ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பிரதமர் மோடியின் தற்போதைய நிகழ்ச்சி நிரலாக உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்பை அழித்து விடும். நாட்டிற்கு பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது.
விசாரணை நீதிமன்ற நீதிபதிகள், தங்கள் பதவியை காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு உயர்நீதிமன்றங்களின் கோபத்தைத் தவிர்க்க, குற்றம் சாட்டப்படும் நிரபராதிகளை தேவை இன்றி தண்டிக்கிறார்கள்.
குழந்தை செய்யும் தவறுகளையும், கொடுமைகளையும் புன்னகையுடன் வேடிக்கை பார்க்கும் பணக்கார பெற்றோர்களைப் போல அமெரிக்காவும், அந்த குழந்தையாக இஸ்ரேலும் உலகில் நடந்து கொண்டு இருக்கின்றன.
தோல்வி பயத்தில் உள்ள பாஜக, ஜார்க்கண்ட் மக்களை திசைதிருப்ப பல்வேறு புதிய விவகாரங்களை கிளப்பி வருகிறது. பாஜகவின் அனைத்து திட்டங்களையும் முறியடித்து “இந்தியா” கூட்டணி மீண்டும் ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கும்.