states

img

தனுஷ்கோடி கடலில் 4000 மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டம்

இராமேஸ்வரம், ஜூன் 12- 1964-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம்  தேதி வீசிய புயலால் இராமேஸ்வரத்தி லிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள தனுஷ்கோடி அழிந்தது. வீடுகள், பள்ளிகள், மருத்துவ மனைகள், தபால் நிலையங்கள், ரயில்  பாதைகள் மட்டுமல்லாது 100 க்கும்  மேற்பட்ட நபர்களுடன் தனுஷ்கோடிக்கு வந்த இரயிலையும் கடல் அலை மூழ்க டித்தது. இரயிலையோ, அதில் பய ணித்தவர்களையோ இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த நகரம்  வாழத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட் டது. ரயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. இந்த நிலையில் ரூ.700 கோடி  மதிப்பில் இராமேஸ்வரம்-தனுஷ் கோடி இரயில் பாதையை மீண்டும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தனுஷ்கோடி கடல்பரப்பில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தனுஷ் கோடி மீண்டும் புதுப்பொலிவு பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

கடலுக்குள் காற்றாலை  மின் திட்டம்

2030-ஆம் ஆண்டுக்குள் நாடு முழு வதும் காற்றாலை, சூரியசக்தி, சிறிய நீர் மின் நிலையங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்  உற்பத்தித் திறனை, 4.50 லட்சம் மெகா  வாட்டாக அதிகரிக்க, முடிவு செய்யப்  பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் நிலவரப்படி சூரியசக்தி மின் உற்பத்தி திறன், 55 ஆயிரத்து 337 மெகா வாட்டாகவும்; காற்றாலை, 40 ஆயிரத்து 528 மெகா வாட்டாகவும் உள்ளது. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி திறன், 8,600 மெகா வாட்; சூரிய சக்தி, 5,518 மெகா வாட்டாக உள்ளது. 

நான்காயிரம் மெகாவாட்  மின் உற்பத்தி

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைச்சகம் எதிர்வரும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் தமிழக கடற்கரையில் நான்கு ஜிகாவாட் (நான்கு ஆயிரம் மெகாவாட்) திற னுக்கு நிகராக கடலோர காற்றாலை மின் உற்பத்தியை தொடங்கத் திட்ட மிட்டுள்ளது. தேசியக் காற்றாலை ஆற்றல் கழ கத்தின் (NIWE) வட்டாரங்கள் ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் முதல் கட்ட மாக நான்கு ஜிகாவாட் அளவிற்கு கடலோர காற்றாலை மின் உற்பத்தி யைத் தொடங்க உள்ளது. ஏற்கனவே, தனுஷ்கோடியில் காற்  றாலை மின் பரிசோதனைக் கூடம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்  துள்ளது. தற்போது அதே இடத்தில்  மின் உற்பத்தியையும் தொடங்குகிறது. தமிழகத்தில் தனுஷ்கோடி கடல்பரப் பில் நான்கு ஜிகாவாட் (நான்கு ஆயிரம் மெகாவாட்) காற்றாலை மின்சாரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட லோர காற்றாலை திட்டங்களுக்கு தேவையான உட்கட்டமைப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. கடற்பரப்பில் ஒரு சதுரகிலோமீட்டர் அளவில் குத்தகைக் கட்டணம் தீர்மா னிக்கப்பட்டுள்ளது. அதிக தொகை கேட்பவர்களுக்கு குத்தகை வழங் கப்படும். “கடற்கரையில் மின் உற்பத்திக் காக இறக்கைகள் 100 மீட்டர் உய ரத்தில் இருக்க வேண்டும், குறைந்தது  50 மீட்டர் ஆழத்தில் காற்றாலை உற் பத்திக்கான தூண்கள் நிறுவப்படும். இதற்காக மொத்தச் செலவில் 70 சத வீதம் தூண்கள் நிறுவுவதற்காக செலவு செய்யப்படும். கடற்கரை காற்றாலை மின் உற்பத்தி 24 மணி நேரமும் செயல்படும், ஆண்டு  முழுவதும் காற்றாலை மின்சாரத்தைப் பெற முடியும். இதனால் மின்உற்பத் திக்கு நிலக்கரியை நம்பியிருப்பது குறையும்.

இது தொடர்பான கூட்டத்தில் அமைச்சர் ஆர்.கே சிங் ஒன்றிய மின் துறை அமைச்சக செயலர் அலோக் குமார், புதிய- புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைச்சகத்தின் செயலர் இந்து  சேகர் சதுர்வேதி ஆகியோர் கலந்து கொண்டனர். தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் தனுஷ்கோடியை-இராமேஸ்வரம்-தமிழகத்துடன் இரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டம் விரைவில் செயல்  படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்காக தென்னக இரயில்வே ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளது. இரயில்வே அமைச்சகத்திற்கு தெற்கு இரயில்வே அனுப்பியுள்ள புதிய பரிந்துரையின்படி, இராமேஸ்வ ரம்-தனுஷ்கோடியை மீண்டும் இரயில் பாதை மூலம் இணைக்க வேண்டும், இதனால் இராமேஸ்வரம் வரும் சுற்று லாப் பயணிகள் தனுஷ்கோடிக்கு வந்து  செல்வர் எனக் கூறியுள்ளது. இது குறித்துப் பேசிய, மதுரை கோட்ட ரயில்வே பொறியாளர் “1964-ஆம் ஆண்டு புயலால் இந்தப் பாதை அழிந்தது. இப்போது அதை மீண்டும் உருவாக்க அரசு முன்வந்துள்ளது என்றார். புதிய இரயில் இணைப்புத் திட்டம் குறித்துப் பேசிய மதுரை கோட்ட உதவி  செயற்பொறியாளர், இந்த நிலை யத்தை மீண்டும் மேம்படுத்தி புதிய அக லப்பாதை மற்றும் மின் பாதையுடன்  இணைக்க இரயில்வே திட்டமிட்டுள் ளது. இராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த வழித்தடத்தில் மூன்று இரயில் நிலை யங்கள் மற்றும் ஒரு டெர்மினல் (சந் திப்பு) நிலையமும் அமையவுள்ளது. இதன்மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என நம்புகி றோம் என்றார்.  தெற்கு ரயில்வேயின் வரலாற்றில் இப்பணி ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது.