states

img

ரயில்வேயில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை மீண்டும் நியமிப்பது இளைஞர்களுக்கு எதிரானது

புதுதில்லி ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான அமைச்ச கத்தின் முடிவிற்கு அதிருப்தி தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்க ளவை உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி. (கேரளம்) ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஏ.ஏ.ரஹீம் எம்.பி. கடிதத்தில் குறிப்பிட்டதாவது, “நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக அலை கின்றனர். புதிய பணியிடங்களை உருவாக்கி வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க வேண்டிய சூழலில், இருக்கும் காலி பணி யிடங்களுக்கு கூட ஓய்வு பெற்ற அதிகாரி களை பணியமர்த்துவது மிகவும் ஆட்சேபணை க்குரிய மற்றும் எதிர்மறையான அணுகுமுறை யாகும். அதனால் இந்த முடிவை ரயில்வே உட னடியாக திரும்பப் பெற வேண்டும். தற்போது ள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு புதிய நியமனங்கள் செய்யப்பட வேண்டும். புதிய பதவிகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்” என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.