states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மீனவர்கள் நலன் காக்கவும், கடலில் காணா மல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும்   ரூ.1 கோடி சுழல் நிதி உரு வாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு அக்.15 வரை விநாடிக்கு 3000  கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற காவிரி ஆணைய உத்தரவை எதிர்த்தும், மேகதாது விவரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுவது குறித்தும், கர்நாடக முதல்வர் மற்றும் சட்ட வல்லு நர்களுடன் ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப் படும் என கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தானத்தில் ஈத்  மிலாடி நபி ஊர்வலத்தில் தற்கொலைப் படை தாக்குதல் குண்டுவெடிப்பில் 52 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காய மடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பை கண்காணிப் பதற்கு, 45 சுகாதார மாவட்டங்களுக்கும் 9  சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு நகரில் சில தினங்களுக்கு முன்பு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து பிரிவு ஏ.டி.ஜி.பி. அலோக் குமாரை பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் அனுமதி கோரியிருந்த நிலையில், ஒரு சிறுவன் உள்பட 6 பேரும் மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இந்த வழக்கில் 4 சிறுவர்கள் உள்பட 25 பேருக்கு ஏற்கனவே டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.