சென்னை, ஜூன் 8- தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறை களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் என 6 ஆயி ரத்து 244 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக் கான அறிவிப்பை தமிழ்நாடு அர சுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜனவரி 30 அன்று வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 30 முதல் பிப்ரவரி 28 வரை ஆன்லைனில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப்-4 எழுத்து தேர்வு நாளை (ஜூன் 9) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள் ளது. காலை 9.30 மணி முதல் பிற் பகல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெற உள்ளது. இதனை சுமார் 20 லட்சம் பேர் எழுதுகின்ற னர். தற்போது 6,244 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்துக் கும் மேல் அதிகரிக்கப்பட உள்ள தாக அரசு வட்டாரங்கள் தெரி விக்கின்றன. குரூப்-4 தேர்வை தொடர்ந்து, ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக் கான அறிவிப்பு ஜூன் 28 அன்று வெளியிடப்பட உள்ளது.