states

அழகும், அமைதியும் நிறைந்த அசோக சிங்கங்கள் அச்சுறுத்துகிற ஆக்ரோஷ சிங்கங்களாகிவிட்டன

பிரபா பார்கவா பேட்டி

இந்தூர், ஜூலை 17- புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றத் தின் உச்சியில், 9,500 கிலோ எடையும், 6.5  மீட்டர் உயரமும் கொண்ட தேசிய சின்னத்தின் சிலையை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை 11 அன்று திறந்து வைத்தார். முழுக்க வெண்கலத்தாலான இந்த சின் னத்தை தாங்கும் வகையில் சுமார் 6,500 கிலோ  எடையில் இரும்பிலான அடித்தளமும் கட்டப் பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய சின்னமாக விளங்கும் அசோக முத்திரை, முதலில் அசோக பேரரசரால்  புத்தரின் அமைதி கொள்கையை பரப்பப் பயன்  படுத்தப்பட்டது. இந்த அசோக தூண்களின் மேல்  பகுதியில் காணப்படும் நான்கு சிங்கங்கள் துணிவு, வலிமை, நம்பிக்கை மற்றும் பெருமை ஆகியவற்றைக் குறிக்கின்றன. மேலும் சிங்கங் கள் நிற்கும் ஒரு வட்ட வடிவ அபாகஸானது, காளை, குதிரை மற்றும் யானையின் வேலைப்  பாடுகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். பாஸ்போர்ட் முதல் ரூபாய் நோட்டுகள் வரை  இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அதிகா ரப்பூர்வ ஆவணத்திலும் அசோகத் தூண் உள்ளது. இந்திய கொடி கூட அசோகருக்கு மரி யாதை செலுத்துகிறது. ஏனெனில் அசோக சக்க ரம் கொடியின் நடுப்பகுதியில் நிறுவப்பட்டுள் ளது. 

வடக்கே தட்சசீலத்திலிருந்து கோதாவரி நதி, ஸ்வர்ணகிரி மலைகள் மற்றும் தெற்கே  மைசூரு வரை அசோகப் பேரரசு பரவியிருந்த  நிலையில், அந்த அசோகப் பேரரசர் ஏற்றுக்  கொண்ட அமைதிக் கொள்கையை பிரதி பலிப்பதாக இந்தியாவின் தேசியச் சின்னமாக அசோகத்தூண் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  ஆனால், நரேந்திர மோடி அரசால் புதிதாக  நிறுவப்பட்டுள்ள தேசிய சின்னம், அசல் வடி வமைப்பை முற்றிலுமாக சிதைத்து நாசப் படுத்தி விட்டது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆகும். ஆனால், புதிய தூணின் கட்டடக் கலைஞர் சுனில் தியோர், அசல் சின்னத்திலிருந்து மிகக்  குறைவான மாற்றங்களையே புதிய சின்னத் தில் செய்துள்ளதாக கூறினார். அசல் வேலை யைப் போலவே 99 சதவிகிதம் உள்ளது என்று  குறிப்பிட்டார். பாஜக தலைவர்களும் இதையே  இப்போதுவரை கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் அசல் தேசிய  சின்னத்தை வடிவமைத்த குழுவில் ஒரு இணை  கலைஞராக இருந்த ஓவியர் தினாநாத் பார்கவா வின் மனைவி பிரபா பார்கவாவும் (85) புதிய  சின்னம் மீது விமர்சனங்களை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர்  பேட்டி அளித்துள்ளார். அதில், “அசல் அசோகத்  தூணில் செய்யப்பட்ட சிங்கங்கள் அமைதியை  விரும்புபவர்கள். புதிய தூணில் சிங்கங்களின்  வாய்கள் ஆக்ரோஷமாகத் திறந்திருப்பதால்,  அவை கடுமையான வடிவில் சித்தரிக்கப்பட்டுள் ளன” என்று தெரிவித்துள்ளார்.

“தனது கணவர் தினாநாத் பார்கவா வரைந்த  தேசியச் சின்னத்திலுள்ள சிங்கங்கள் அமைதி யை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும். சமீ பத்தில் செதுக்கப்பட்ட சின்னத்தில் சிங்கங்கள் மூர்க்கத்தனமாக காட்டப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன்” என்று கூறியிருக்கும் பிரபா  பார்கவா, “முன்னர் இந்த ஓவியப் பணியை நிறை வேற்றுவதற்காக, கல்கத்தாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையிலுள்ள சிங்கங்களை உன்னிப்பாகக் கவனிப்பதற்காக தினாநாத் பார்  கவா அங்கு மூன்று மாதங்கள் தொடர்ந்து  சென்றார்” என்றும், அவ்வளவு அர்ப்பணிப்பு டன் வடிவமைக்கப்பட்ட “அழகான மற்றும் நம்பிக்கையான” அசோக சிங்கங்களுக்கு பதிலாக, அச்சுறுத்தும் மற்றும் ஆக்ரோஷமான தோரணை கொண்டவைகளை ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரபா தனது கணவர் வரைந்த படத்தில்,  “சிங்கம் தனது பெண் மற்றும் குழந்தையுடன் அமைதியாக அமர்ந்திருப்பது போல் தெரி கிறது. ஏனெனில் அரசியல் சட்டத்தின் முதல் பக்கத்தில் படம் பயன்படுத்தப்படுவதால், சிங்கங்களை அப்படி வரைய வேண்டும் என்று மனதில் வைத்திருந்தார். சிங்கங்களின் அமைதியான உள்ளுணர்வை அவரது இந்த அரிய படத்தில் இணைத்தார்” என்றும் விளக்கம் அளித்துள்ளார். பார்கவா வரைந்த அசல் படத்  தையும் அவரது குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர்.  இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்  லால் நேரு, அரசியலமைப்பின் அசல் பிரதி யை வடிவமைக்கும் பணியை ரவீந்திரநாத் தாகூ ரின் சாந்திநிகேதனின் கலா பவன் முதல்வரும், பிரபல ஓவியருமான நந்தலால் போஸிடம் கொடுத்தார். ஓவியர் போஸ், அசோக சின்னத்  தின் படத்தை உருவாக்கும் பணியை தினாநாத்  பார்கவாவிடம் ஒப்படைத்தார். அப்போது தினா நாத், சாந்திநிகேதனில் பயின்று வந்தார். கடந்த டிசம்பர் 24, 2016 அன்று தனது 89 வயதில் இந்தூ ரில் தினாநாத் மரணமடைந்தார்.