states

நீட் தேர்வுவிலக்கு மசோதா எங்கிருக்கிறது? ஆளுநர் மாளிகையிலா? ஜனாதிபதி மாளிகையிலா?

சென்னை, ஜூலை 12 -  தமிழ்நாடு சட்டப் பேரவை இரண்டுமுறை நிறைவேற்றி அனுப்பிய மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சட்ட முன் வடிவு மீது எடுக்கப்பட்ட நட வடிக்கை என்ன? சட்ட முன் வடிவின் தற்போதைய நிலை என்ன? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி   ஆளுநர் செயலகத்திற்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர், பு. பா. பிரின்ஸ் கஜேந்திர  பாபு மனு அனுப்பினார். மிகவும் கால தாமதமாக (98 நாட்கள்  கழித்து) ஜூலை 7 ஆம் தேதியிட்ட கடிதம் ஜூலை 11, 2022 அன்று அவரு க்கு கிடைத்தது. பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டச் செய்தி அதிர்ச்சி தருவதாக உள்ளது. அந்த மசோதா  “சம்மந்தப்பட்ட அதிகாரியின் பரி சீலனையில் உள்ளதாகவும்,  

அதனால்  கோரியத் தகவலைத் தெரிவிக்க இய லாது” என்றும் பதிலில் கூறப்பட்டுள் ளது. “சம்மந்தப்பட்ட அதிகாரி”யின் பரிசீலனை என்றால் எவ்வாறு புரிந்து  கொள்வது. ஆளுநர் செயலகத்திலா? அல்லது குடியரசுத் தலைவர் செயல கத்திலா? ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக்காக சட்ட முன் வடிவு அனுப்பப் பட்டுள்ளது என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அவர் அறிவித்து இரண்டு மாதங்கள் கழித்து,  “சம்மந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனை”யில் உள்ளது என்று தெளி வற்ற, நேரடிப் பதில் தருவதிலிருந்து தப்பிக்கும் சொல்லாடலை ஆளுநர் மாளிகை பயன்படுத்தி உள்ளதால், ஆளுநர் மாளிகையில் இருந்து சட்ட முன் வடிவு குடியரசுத் தலைவர் ஒப்புத லுக்கு சென்றுள்ளதா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.   பதில் திருப்தி யாக இல்லை, நேரடி பதில் வேண்டும்  என்று கோரி ஆளுநர் செயலகத்தின் தகவல் தரும் அடுத்த நிலை அதிகா ரிக்கு மேல் முறையீடு மனுவை அனுப்பி  உள்ளோம். தமிழ்நாடு அரசு, சட்ட முன் வடிவின் தற்போதைய நிலை என்ன  என்பதை அறிந்து, தெளிவான தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரி  முதலமைச்ச ருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.  தமிழ்நாடு மக்களுக்கு தெளிவான விடைத் தேவை என பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார்.