சிக்கிம் மாநிலத்தில் இடைவிடாமல் கன மழை மிரட்டி வரும் நிலையில், மாங்கன் மாவட்டத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தனர். பலர் மாய மாகியுள்ளனர். மேலும் நிலச்சரிவு காரணமாக பல வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மருத்து வர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் கோனில் மனித விரல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த விரல் சுமார் 2 செமீ நீளம் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவத்தால் மகாராஷ்டிராவில் ஐஸ்கிரீம் விற்பனை கடுமையாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தி யர்களின் உடல்கள் வெள்ளியன்று காலை தில்லி கொண்டு வரப்படுவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சாமுண்டி வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் 3ஆவது முறையாக நிய மிக்கப்பட்டுள்ளார். பிரதமரின் முதன்மைச் செய லாளராக பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் சட்டவிரோ தமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக ஆயு தங்கள், வெடி பொருட்களை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி எல்லைப் பகுதி யில் உள்ள ஒரு வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் 7 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
சிறுமி ஒருவரின் உள்ளாடையை களைந்து அவர் முன்பாக தானும் நிர்வாணமாக நின்ற நபரின் செயல், பாலியல் பலாத்காரம் என்பதில் சேராது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் சர்ச்சைக் குரிய வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
“நீட் தேர்வு விவகாரத்தில் முறைகேடுகள் எது வும் நடைபெறவில்லை. நீதிமன்றத்தின் உத்த ரவுகளை ஏற்போம்” எனவும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மழுப்பியுள்ளார்.