states

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணம்

திருவண்ணாமலை, ஏப். 28- திருவண்ணாமலையில் காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர் மர்ம முறை யில் மரணம் அடைந்தார்.   திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தட்டரணை கிராமத்தில் குறவர் இன குடும்பத்தினர் 120 பேர் வசிக்கின்றனர். அந்த கிராமத் தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மனைவி மலர். இந்நிலையில் கடந்த  26ஆம் தேதி தங்கமணியை திரு வண்ணாமலை மதுவிலக்கு அம லாக்கப் பிரிவு காவல் துறையினர் சந்தே கத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசா ரணை முடிந்து தங்கமணியை திரு வண்ணாமலை கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதனன்று மாலை தங்கமணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கிளைச் சிறை அதிகாரி கள் திருவண்ணாமலை அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து தங்கமணியின் உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் தாக்கிய தால்தான் தங்கமணி இறந்தார் என்றும், தாங்கள் குறவர் இன மக்கள் என்பதால் தங்கள் மீது பொய்யாக சாராய வழக்கு போடுவதாகவும், சாராய  வழக்கு போடக் கூடாது என்றால் ஆய்வா ளர் தங்களிடம் லஞ்சம் கேட்பதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். எனது அப்பாவின் மரணத்திற்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் தான் காரணம் என்றும், தனது தந்தை யின் மரணத்திற்கு காரணமான காவல் துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்கள் கிராமத்தார் மீது போடும் பொய் வழக்குகளை காவல் துறையினர் நிறுத்த வேண்டும் என்றும் தங்கமணியின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார். தந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த உறவினர்களை காவல் துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆட்சியரை சந்தித்த உறவினர்கள் முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் தவறு செய்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.