states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்திய ஊடகங்கள் நிரந்தரமாக மோடி அரசை கேள்வி கேட்காமல் பாஜகவை ஆதரித்து வருகின்றன. அப்படி இருக்கையில் நாட்டில் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் எப்படி நடந்திருக்கும்? 

“ஒரே நாடு ஒரே தேர்தல்” வராது; அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். முதலில் ஜிஎஸ்டியை அழிக்க வேண்டும்; முட்டாள்தனத்தில் ஜிஎஸ்டியை கொண்டு வந்துள்ளனர்; நிதி அமைச்சருக்கு ஒன்றும் தெரியாமல் அதிகாரிகள் எழுதி தருவதை படிக்கிறார்.

உலக அரங்கில் அதானி ஊழல் விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், இந்திய அரசும், செபி அமைப்பும் இதுவரை அதானிக்கு ஒரு நோட்டீஸ்கூட அனுப்பவில்லை. எல்லாவற்றையும் மீறி அதானி குறித்துப் பேசினால், அவைக்குறிப்பிலிருந்து நீக்குவது, மிரட்டுவது என நாடாளுமன்றத்தை நடத்தி வருகிறார்கள். ஒரு தொழிலதிபரைக் கண்டு ஒரு அரசு இப்படி நடுங்குவதும், இப்படிக் காலடியில் விழுந்துகிடப்பதும் இதுவரையிலான இந்திய வரலாற்றில் நடக்காத ஒன்று.

சமீபத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தில்லி முதல்வர் அதிஷியை போலி வழக்கில் கைது செய்ய புலனாய்வு அமைப்புகளுக்கு பாஜக உத்தரவிட்டுள்ளது. அதிஷி மீதான கைது நடவடிக்கை எந்த நேரத்திலும் நிகழலாம்.

கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் பாஜக ரூ.2,244 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.580 கோடி கிடைத்த நிலையில், காங்கிரஸுக்கு ரூ.289 கோடி மட்டுமே கிடைத்தது.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகார் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வெற்றி  பெற வைக்க அக்கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. அதனால் “இந்தியா” கூட்டணி யில் இருந்து காங்கிரஸ் கட்சியை நீக்க வேண்டும்  என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.