பல்கலை. மாணவி வழக்கை தாமாகவே விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்!
சென்னை, டிச. 27 - அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் திங்கட்கிழமை இரவு கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இரு வர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவி யை பாலியல் வன்கொடுமை செய்துள்ள னர். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஞானசேகரன் (33) என்பரை காவல்துறை யினர் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபரைப் பிடிக்க காவல்துறை யினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. உயர்நீதிமன்றம் இதனை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் முறை யிட்ட நிலையில், நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பதி வாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தர விட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 23 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை,டிச.27- இந்திய தேர்தல் ஆணை யம், அடுத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி ஏற் படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத் தப் பணிகளை அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவ தும் உள்ள 69 ஆயிரம் வாக் குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப் பட்டன. இதில் பெயர் சேர்க்க 8,38,016, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க 4, ஆதார் இணைப்புக்கு 783, பெயர் நீக்கம் செய்ய 1,19,701 மற்றும் திருத்தம் மேற்கொள்ள 4,42,111 என 14 லட்சத்து 615 விண்ணப் பங்கள் பெறப்பட்டன. இது தவிர, தாலுகா அலுவல கங்களில் வாக்காளர் பட்டி யல் பதிவு அதிகாரிகளிடம் நேரிலும், ஆன்லைன் மூல மும் விண்ணப்பங்கள் பெறப் பட்டன. அந்த வகையில், 17 லட்சத்து 70 ஆயிரத்து 901 விண்ணப்பங்கள், ஆன் லைன் வாயிலாக 5 லட்சத்து 38 ஆயிரத்து 490 விண்ணப் பங்கள் என மொத்தம் 23 லட்சத்து 9 ஆயிரத்து 391 விண்ணப்பங்கள் பெறப் பட்டன. இதில், பெயர் சேர்க்க மட்டும், ஆன்லைனில் 1,08, 872, நேரடியாக 9,22,372 விண்ணப்பங்கள், பெயர் நீக்க ஆன்லைனில் 2,69, 200, நேரடியாக 2,81,915 விண்ணப்பங்கள் பெறப்பட் டன. முகவரி மாற்றம், திருத் தம் செய்ய ஆன்லைனில் 1,60,372, நேரடியாக 5,66, 605 விண்ணப்பங்கள் பெறப் பட்டன. விண்ணப்பங்களின் பரிசீலனை செய்யப்பட்டு, தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கள் தொடங்கியுள்ளன. அடுத்தாண்டு ஜன.6 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடப்பட உள்ளது. அதன்பின் புதிய வாக்கா ளர்களுக்கு தேசிய வாக்கா ளர் தினத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
அண்ணாமலை மீது வழக்குப் பதிய கோரி புகார்
மதுரை, டிச.27- மாணவி பாலியல் வன் கொடுமை தொடர்பான எப்ஐஆர் தகவலை வெளி யிட்ட விவகாரத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த வழக்க றிஞர் சுமேஷ் என்பவர், மாந கர் காவல் ஆணையருக்கு ஆன்லைனில் அளித்த புகார் மனுவில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான வீடியோவை யூடியூப்பில் பார்த்தேன். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அவரது பேட்டி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை தந் தது. பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், எப்ஐஆரில் குறிப் பிடப்பட்டுள்ள விபரங்களை வெளிப்படையாக பொது வெளியில் கூறியுள்ளார். அவரது செயல் தண்டிக் கக்கூடியது. இப்படியொரு இக்கட்டான சூழலில் பாதிக் கப்பட்டவரின் சம்மதம் இன்றி தகவல்களை கூறு வது அவரது தனியுரிமையை மீறுவதாகும். இதன் விளைவு களை அறிந்து வேண்டு மென்றே மீறியுள்ளார். எனவே, எப்.ஐ.ஆரில் உள்ள விபரங்களை பொதுவெளி யில் பரப்பி அத்துமீறி ஒரு பெண்ணிற்கு களங்கம் ஏற் படுத்தும் வகையில் நடந் துள்ளதால், பாஜக தலை வர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்து சட் டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவினர் மீது வழக்குப்பதிவு
சென்னை, டிச.27- சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளா கத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வ லையையும், கொந்த ளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், அனுமதி யின்றி அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 900 பேர் மீது கோட் டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள னர். அதைபோல், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜகவினர் 417 பேர் மீதும் கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்துள்ளனர்.