states

img

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க உத்தரவிட முடியாது

சென்னை,ஜன.17- பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், பாஜகவின் மனுவை தள்ளுபடி செய்தது. பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 ரொக்கமும் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடு மாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் பொதுநல மனு அளித்திருந்தார். இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கூறுகையில், பொங்கல் திருநாளுக்கு பரிசு தொகுப்புடன் மக்களுக்கு ரொக்கப் பணம் வழங்கினால், மகிழ்ச்சிதான். ஆனால், இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு, ரொக்கப்பணம் ரூ. 2000 வழங்கும் படி அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறி, இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டனர். தமிழக அரசின் நிதி நிலைமையில் நெருக்கடி என்று கூறிய அரசு, இந்தாண்டில் பொங்கல் திருநாளில் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்க முடியவில்லை என்று தெரிவித்தது.