சென்னை, ஏப். 13 - இ-சேவை முறையில் வாரிசு சான்றிதழ் கோரும்போது அது நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணங்களை 1000 எழுத்துகளில் தெரிவிக்க வேண்டுமென்ற அர சின் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரி வித்துள்ளது. சேலத்தை சேர்ந்த சின்னப் பிள்ளை என்பவர் வாரிசு சான்றி தழ் கேட்டு அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு கடந்த முறை விசார ணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சார்பில் அரசு வழக்கறிஞர் டி.என்.சி. கவுசிக் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு அரசு இ-சேவை மூலமாக வாரிசு சான்றி தழ்கள் கேட்டு விண்ணப்பிக் கும் மனுக்கள் நிராகரிக்கப்படும் போது, அதற்கான காரணங்களை 100 எழுத்துகளில் தெரிவிக்க வேண்டுமென்ற வரையறையை, 1000 எழுத்துக்கள் என மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நடை முறை உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த அறிக்கைய ஏற்று வழக்கை முடித்து வைத்த நீதி பதி அனிதா சுமந்த், நீதிமன்ற கருத் தினை உடனடியாக பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை எடுத்து மக்கள் பயனடையும் வகையில் செயல்பட்ட தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.